Monday, September 13, 2010

செட்டிநாடு ஸ்பைஸி சிக்கன்

செட்டிநாடு ஸ்பைஸி சிக்கன்




அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் மசாலா கலந்த செட்டிநாட்டு வறுவல் என்றால் சொல்லவே வேண்டாம். எளிதாய் செய்து இனிதாய் சாப்பிடுங்கள்! செட்டிநாட்டின் சுவையும் மணமும் அப்படியே ஒட்டிக்கொள்ளும் நாவில்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ

வெங்காயம் - 2 பெரியது

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்

தக்காளி - 2 பெரியது

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தனியாதூள் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:



எண்ணை - 100 மி.லி

பட்டை - இரண்டு அங்குலம் இரண்டு

ஏலக்காய் - 4

மிளகு - 1 டீஸ்பூன்

கருவேப்பிலை - சிறிது

கடைசியில் தூவ:

மிளகு - 1 டீஸ்பூன் (பொடித்தது)

எலுமிச்சை - 2

கருவேப்பிலை - சிறிது

கொத்துமல்லி - சிறிது

பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

* சிக்கனை கழுவி சின்ன சின்ன துண்டுகளாக போட்டு தண்ணீ¬ரை வடித்து வைக்க வேண்டும்.

* ஒரு பெரிய வாயகன்ற சட்டியை காய வைத்து பட்டை, ஏலக்காய், மிளகு, கருவேப்பிலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.

* பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்லா வதக்கி கலர் மாறியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாதூள், போட்டு வதக்கி சிக்கனை போட்டு அதிக தீயில் கிளறவேண்டும்.

* பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு உப்பும் சேர்த்து நல்லா கிளறி தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் தக்காளியை வதங்க விட வேண்டும்.

* பிறகு ஒரு டம்ளர் தண்¬ணீர் சேர்த்து மீண்டும் வேக விட வேண்டும்.

* கடைசியில் பட்டர், பொடித்த மிளகு, கருவேப்பிலை, எலுமிச்சை சாறு ஊற்றி கொத்து மல்லி தழை தூவி இறக்க வேண்டும்.

No comments:

Post a Comment