Sunday, December 26, 2010

ஈசன்

'சுப்பிரமணியபுரம்' படத்தை தயாரித்து, இயக்கி நடித்த சசிகுமார், 'நாடோடிகள்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின்பு 'பசங்க' படத்தை தயாரித்தார். இந்தப் படங்களை அடுத்து அவர் எழுத்து, மற்றும் இயக்கத்தில் வளர்ந்துள்ள புதிய படம், 'ஈசன்'. கதாநாயகன்-கதாநாயகி என்று யாரும் இல்லாமல், எல்லா கதாபாத்திரங்களும் கதை நாயகர்களாக அமைந்துள்ளனர். இயக்குநர் சமுத்திரக்கனி, பட அதிபர் ஏ.எல்.அழகப்பன், 'நாடோடிகள்' புகழ் அபிநயா, மலையாள இயக்குநர் பிளஸ்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் வைபவ், 'மும்பை' அபர்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜேம்ஸ் வசந்தன் இப்படத்திற்கு இசையமைக்க, நா.முத்துக்குமார், யுகபாரதி, மோகன்ராஜ் பாடல்கள் எழுதுகின்றனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.கே.நாகுராஜ் கலைப்பணியை மேற்கொள்கிறார். ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். தினேஷ் நடனம் அமைக்கிறார். ராஜசேகர், திலீப் சுப்புராயன் சண்டைப்பயிற்சி அளிக்கின்றனர். "தலைப்பை பார்த்ததும் பக்திப் படமோ என்று தோன்றும். அதுதான் இல்லை. இது நகரத்தில் வாழும் மக்களின் பின்னணியில் அமைந்த கதை. வெளியூரில் இருந்து பிழைக்க வந்தவர்கள், ஏழைகள், பணக்காரர்கள் இப்படி எல்லாரும் எல்லாம் கலந்தது தான் நகரம். இதில் பகலில் ஒரு முகம், இரவில் இன்னொரு முகம் காட்டும் மனிதர்கள். இவர்களின் முகமூடி வாழ்க்கையை அவரவர் பின்னணியில் இருந்து திரைக்கதையாக்கியிருக்கிறேன்". என்னுடைய முந்தைய படத்திற்கும் இந்தப் படத்திற்கும் துளியளவுகூட சம்பந்தம் இருக்காது என்கிறார் இயக்குநர் சசிகுமார். இந்தப்படத்தை முதலில் சீயான் விக்ரம் தயாரிப்பதாக இருந்தது. அவர் பின்வாங்கிக் கொள்ளவே, சசிகுமாரே நேரடியாகத் தயாரிக்கிறார். அதோடு சசிகுமாரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சென்னை, ஐதராபாத், பெங்களூர் ஆகிய இடங்களில் இந்தப் படம் வளர்ந்து இருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம். இயக்கம், தயாரிப்பு: சசிகுமார், இணைதயாரிப்பு: அசோக்குமார், இசை: ஜேம்ஸ் வசந்தன், ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.கதிர், கலை: ஆர்.கே.நாகுராஜ், படத்தொகுப்பு: ஏ.எல்.ரமேஷ், பாடல்கள்: நா.முத்துக்குமார், யுகபாரதி, மோகன்ராஜ், நடனம்:தினேஷ், சண்டைப்பயிற்சி: ராஜசேகர், திலீப் சுப்புராயன். 'ஈசன்' படம், டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

நந்தலாலா

ஐய்ங்கரன் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கி நடிக்கும் படம் 'நந்தலாலா', 'அஞ்சாதே', 'சித்திரம் பேசுதடி' போன்ற தனது மூன்றாம் தர திரைப்படங்களே வெற்றி பெற்றுவிட்ட நிலையில், தனது சிறந்த படமான 'நந்தலாலா' திரைப்படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் இல்லாத நிலையே தற்பொழுது தமிழ் சினிமாவில் உள்ளது என சில நாட்களுக்கு முன்பு மிஷ்கின் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். வித்தியாசமான படங்களை ரசிப்பவர்களுக்கு 'நந்தலாலா' சிறந்த உணர்வினைத் தரும் என்றும் மிஷ்கின் தெரிவித்திருந்தார். தயாராகி வெகு நாட்களாகியும் வெளியிடுவதற்கு ஆள் இன்றி தவித்து வந்த 'நந்தலாலா' வரும் நவம்பர் 26ல் வெளியாகும் எனத் தெரிகிறது. இப்படத்தின் நாயகனாக மிஷ்கின் நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக 'கத்தாழ கண்ணால' பாடல் மூலம் புகழ் பெற்ற ஸ்னிக்தா நடித்துள்ளார். இளையராஜாவின் இசை இப்படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. 'வாள மீனுக்கும்', 'கத்தாழ கண்ணால' போன்ற குத்துப்பாடல்களால்தான் தனது படங்கள் ஓடுகிறது என இனி யாரும் பேசி விடக்கூடாது என முடிவெடுத்திருக்கும் மிஷ்கின், 'நந்தலாலா' படத்தில் இரண்டே பாடல்கள் போதுமென்று இசைஞானி இளையராஜாவிடம் கூறிவிட்டாராம். எடுத்த வரைக்கும் படத்தை போட்டுப் பார்த்த இளையராஜா, மிஷ்கினை வாயார பாராட்டினாராம். க்ளைமாக்சில் வசனங்களுக்கு பதிலாக சுமார் 45 நிமிடம் இடம் பெறும் ரீரெக்கார்டிங்தான் படத்தின் ஹைலைட் என்கிறார்கள். இந்த ஒரு விஷயத்துக்காகவே இளையராஜாவை ஒப்பந்தம் செய்திருந்தாராம் மிஷ்கின். படத்தின் கதை ஜப்பானிய திரைப்படம் 'Kikujiro'வின் தழுவல். ஒரு சிறு பையன் அவன் அம்மாவைத் தேடி பல நூறு மைல் தூரம் இருக்கும் ஊருக்குப் போகிறான். அந்தப் பையனுக்குத் துணையாக மனநோயாளி ஒருவன் உதவுகிறான். இந்த பயணத்தில் இவர்கள் சந்திக்கும் மனிதர்களை பற்றிதான் கதை. சிறுவனாக அஸ்வத்ராம் நடித்துள்ளான். மிஷ்கின் மனநோயாளியாக நடித்துள்ளார். ஸ்டண்ட் நடிகர் பிரகாஷ், நாசர், ரோஹினி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி, தயாரிப்பு: கே.கருணாமூர்த்தி, சி.அருண்பாண்டியன், சண்டைப்பயிற்சி: 'ஆக்ஷன்' பிரகாஷ். நிர்வாகத் தயாரிப்பு: கே.விஜயகுமார், தயாரிப்பு ஒருங்கிணைப்பு: எல்.வி.ஸ்ரீகாந்த். 'நந்தலாலா' விரைவில் தாலாட்ட வருகிறது.

ஆடுகளம்

'பொல்லாதவன்' படத்துக்குப் பின்பு வெற்றிமாறனின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ஆடுகளத்தில். 'ஆடுகளம்' வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இரண்டாவது படம். இதில் டெல்லியை சேர்ந்த மாடல் அழகி தபசி பன்னு கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மதுரை அருகே வாழும் ஒரு மனிதனின் கதை தான் 'ஆடுகளம்'. ஒரு குறிப்பிட்ட சமூகமும் அதற்குள்ளான பிரச்சினைகளுமே ஆடுகளத்தின் கதைக்களம். இதில் தனுஷ் கருப்பு என்ற கதாபாத்திரத்தில் நாயகனின் கதையாக இல்லாமல் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். தப்சி ஒரு ஆங்கிலோ-இந்திய பெண்ணாக வருகிறார். கருணாஸ், கிஷோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இது த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இதனை பல வழிகளில் விளம்பரப்படுத்த இதனை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளது. 'பொல்லாதவனுக்கு' இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ்குமார் தான் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். கிராமப் பின்னணியிலான படம் என்பதால் வேகமான கிராமத்துப் பாடல்களும், சில மெலோடிகளும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளதாம். 'ஆடுகளம்' படத்தின் இசை உரிமத்தை சோனி மியூசிக் பெற்றுள்ளது. சன் பிச்சர்ஸ் இணைந்துள்ளதால் படத்திற்கு பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ், படத்தொகுப்பு: டி.இ.கிஷோர், கலை: ஜாக்கி, சண்டைப்பயிற்சி: 'ராம்போ' ராஜ்குமார், ராஜசேகர். நடனம்: தினேஷ், பாடல்கள்: வ.ஐ.ச.ஜெயபாலன், சினேகன், யுகபாரதி, ஏகாதசி. ஒலிப்பதிவு: டி.உதயகுமார், பி.ஆர்.ஓ: ஸ்டில்ஸ் ரவி, சிங்காரவேலு. தயாரிப்பு மேற்பார்வை: எஸ்.பி.சொக்கலிங்கம். ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரிக்கிறார். படத்திற்கு தேவையான காதல், ஆக்ஷன் என அத்தனை அம்சங்கள் ஒருங்கே கொண்ட 'ஆடுகளம்' விரைவில் திரைக்கு வருகிறது

கோட்டி

அஞ்சனா சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜெ.டி.சதீஷ்குமார் தயாரிக்கும் படம், 'கோட்டி'. 'விஜயநகரம்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் சிவன், இந்தப் படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக 'நெல்லு' படத்தின் கதாநாயகி பாக்யாஞ்சலி நடித்துள்ளார். இவர்களுடன் சாய்குமார், நந்தா சரவணன், யுவராணி, பாலாஜி, கராத்தே ராஜா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். 'மாத்தியோசி' படத்திற்கு இசையமைத்த குருகல்யாண் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு, ஆர்.எச்.அசோக். அனைத்துப் பாடல்களையும் விவேகா எழுதியிருக்கிறார். படத்தொகுப்பை ப்ரியன் மேற்கொள்கிறார். சாய்மணி கலைப்பணியை கவனிக்கிறார். சண்டைப் பயிற்சியை 'பயர்' கார்த்திக் கவனிக்கிறார். கத்தியை கையில் எடுப்பது தவறு என்று நினைத்த கதாநாயகன், தன் தந்தைக்காக ஒரு சூழ்நிலையில் கத்தியை கையில் எடுக்கிறான். அவன் ஜெயித்தானா, இல்லையா? என்பதே இந்தப் படத்தின் கதை. விறுவிறுப்பான ஆக்ஷனும், பரபரப்பான க்ளைமாக்சும் நிச்சயம் பேசப்படும். சண்டைக் காட்சிகளில் இயக்குநர் சிவன் பயன்படுத்தியது நிஜக் கண்ணாடிதானாம். மற்ற படங்களில் பயன்படுத்துற மாதிரி பைபர் இல்லையாம். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. தயாரிப்பு நிர்வாகி: ராஜேந்திரகுமார். மக்கள் தொடர்பாளர் வி.கே.சுந்தர். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

விராதம்

கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவம், 'விராதம்' என்ற பெயரில் படமாகிறது. இது, சஸ்பென்ஸ்-திகில் கலந்த படம். "மகாபாரத விராட பருவத்தில், கொடிய கீசகனை வதம் செய்கிற பீமனின் புத்திசாலித்தனமும், பைபிளில், மிக பலம் வாய்ந்த பெரிய கோலியாத்தை சிறுவனான தாவீது வீழ்த்துகிற சூட்சுமமும்தான் 'விராதம்' படத்துக்கான ஆதாரம். விராதம் என்றால் முடிவு, தீர்ப்பு என்று அர்த்தம். இந்தப் படத்தின் உச்சக்கட்ட காட்சி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும்" என்கிறார், படத்தின் இயக்குநர் அஜித் எம்.கோபிநாத். லூலூ கிரியேஷன்ஸ் சார்பில் சுல்ஃபிகர் எம்.எஸ். இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். விராடமலை எஸ்டேட்டில், அடுத்தடுத்து நடைபெறும் மரணங்கள் பற்றி துப்பு துலக்குகிறார், ஒரு பெண் பத்திரிகையாளர். அப்போது தெரியவரும் உண்மைகளால் அந்த பெண் பத்திரிகையாளர் அதிர்ச்சி அடைகிறார். இந்த மரணங்களின் காரணம் என்ன? என்பதில்தான் படத்தின் புதுமை அடங்கியிருக்கிறது. நட்பின் ஆழத்தையும், வஞ்சகத்தையும் ஒரு சேர வெளிப்படுத்துகிறது படம். இந்தப் படத்தின் கதையை ஜோஸ் டைட்டஸ் எழுதியிருக்கிறார். திரைக்கதை, வசனம், பாடல்களை கோவில்பட்டி உதயசங்கர் எழுதியிருக்கிறார். உதயன் அம்பானி ஒளிப்பதிவு செய்கிறார். சித்கால் சுஜித் இசையமைக்கிறார். ஜிஜாய், மிதுன், டாக்டர் ஜோசப், சமர்த்தியா, கிருஷ்ணா பிரதீப், சித்தார்த் சிவா ஆகிய புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள். படத்தின் மொத்த கதையும் கூத்துக்கலையின் மூலமாகவே சொல்லப்படுகிறது. பிரபல கூத்துக் கலைஞர் ஓம் முத்துமாரி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஊட்டி, குமுளி, கம்பம், தேனி, நாகர்கோவில், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் படம் வளர்ந்துள்ளது.

கோ

இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மெண்ட்' எஸ்.குமார் மற்றும் ஜெயராமன் இணைந்து தயாரிக்கும் படம் 'கோ'. கதாநாயகனாக ஜீவா நடிக்கிறார். ராதாவின் மகள் கார்த்திகா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் அஜ்மல் அமீர் மற்றும் பியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். வில்லனாக பிரகாஷ் ராஜ். இப்படத்தின் நாயகனாக முதலில் கார்த்தி நடிப்பதாக இருந்தது. பின் சிம்புதான் நாயகன் என்று செய்திகள் வந்தது. சிம்பு இயக்குநருடன் முட்டிக்கொள்ள ஒருவழியாக ஜீவா கதாநாயகன் ஆனார். கதைப்படி ஜீவா பத்திரிக்கைகளுக்கு புகைப்படம் எடுக்கும் போட்டோகிராபர். இவரின் கேமரா அரசியல் புள்ளியான பிரகாஷ் ராஜின் முக்கியமான ரகசியங்களை க்ளிக் செய்ய, ஆரம்பமாகிறது ஹீரோ-வில்லனின் ஆடுபுலியாட்டம். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக ஃபான்டம் ஃபிளக்ஸ் என்ற கேமராவை பயன்படுத்தியுள்ளனர். இது சினிமா உலகில் சமீபத்தில்தான் அறிமுகமானது. இந்த கேமராவில் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தைப் படமாக்க ஹாலிவுட்டில் திட்டமிட்டுள்ளனர். இது பற்றி இயக்குநர் ஆனந்த் கூறும்போது, 'கோ' சகல அம்சங்களும் நிறைந்த ஒரு கமர்ஷியல் த்ரில்லர். "இந்த கேமரா அறிமுகமானது பற்றி அறிந்ததும் சந்தோஷப்பட்டேன். இது டிஜிட்டலில் ஹை ஸ்பீட் ரக கேமரா. படமான உடனே அந்தக் காட்சியை திரையில் போட்டுப் பார்க்கலாம். மற்ற கேமராக்களில் இந்த வசதி கிடையாது. அடியாட்களுடன் ஜீவா மோதும் சண்டைக் காட்சியை இந்த கேமராவில் படம் பிடித்துள்ளேன்" என்றார். இப்படத்தில் நிறைய ஹீரோக்களை வைத்து வித்தியாசமான பாடல் காட்சி ஒன்றைப் படமாக்குகின்றனர். இந்தியில் ரிலீசான 'ஓம்சாந்தி ஓம்' படத்தில் இதுபோன்ற பாடலொன்று இடம் பெற்று இருந்தது. அந்தப் பாடலில் ஷாருக்கான், ஹிருத்திக்ரோஷன், தர்மேந்திரா, கோவிந்தா, பிரியங்கா சோப்ரா, கஜோல் உள்ளிட்டோர் நடனம் ஆடினர். அதேபோன்று இப்படத்திலும் காட்சிகளை எடுக்கின்றனர். ரூசா கிளப் டான்சராக வருகிறார். அவருடன் சேர்ந்து கதாநாயகர்கள் நடனம் ஆடுவதுபோல் இந்தக் காட்சி வருகிறது. இதில் நடனம் ஆட விஜய், சூர்யா, ஆர்யா, ஜெயம்ரவி, பரத், தனுஷ் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர் என்பது தனிச் சிறப்பு. இசை: ஹாரிஸ் ஜெயராஜ். ஒளிப்பதிவு: ரிச்சர்ட் நாதன். படத்தொகுப்பு: ஆண்டனி, சண்டைப்பயிற்சி: பீட்டர் ஹெய்ன். 'கோ' விரைவில் திரையைத் தழுவும்.

ஆதிபகவன்

அன்பு பிக்சர்ஸ் சார்பில் ஜெ.அன்பழகன் தயாரிக்கும் படம் 'ஆதிபகவன்'. இவர் ஓர் அரசியல் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. அமீர் இப்படத்தை இயக்குகிறார். 'ராம்', 'பருத்திவீரன்' என அருமையான படங்களை இயக்கி சர்வதேச விருதுகளைப் பெற்ற அமீர் 'யோகி'யில் கதாநாயகனாக நடித்தார். இப்போது 'ஆதிபகவன்' படத்தை இயக்குவதில் கவனம் செலுத்துவதால், நடிப்பாசையைச் சற்று ஒதுக்கி வைத்துள்ளார். தற்போது 'ஆதிபகவன்' படப்பிடிப்பில் படு பிஸியாக இருந்துவருகிறார் அமீர். இதில் ஜெயம் ரவி தாடிவைத்து வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார். கதாநாயகி நீது சந்திரா. கதாநாயகி நீது சந்திரா சிகரெட்டுக்கு அடிமையானவராக நடிக்கிறார். ஒரு நாளைக்கு கணக்கில்லாமல் சிகரெட்டுகளை ஊதித் தள்ளும் கேரக்டர். இதன் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டின் பட்டாயா கடற்கரையில் நடந்து வருகிறது. படத்தின் ஒரு காட்சியில் நீது சந்திரா சிகரெட் குடிக்க வேண்டும். ஆனால், அவரோ நான் சிகரெட்டை கையால்கூட பிடித்ததில்லை என்று அமீரிடம் சாக்கு சொல்ல, அமீர் விடவில்லை. சிகரெட் குடித்தே ஆகவேண்டும் என்று அமீர் கண்டிஷன் போட்டார். பிறகு எப்படி சிகரெட் குடிக்க வேண்டும் என்று நீதுவுக்கு சொல்லிக் கொடுத்தார் அமீர். இந்தக் காட்சிக்கு பல டேக்குகள் வாங்கிய நீது சந்திரா, மொத்தம் 28 சிகரெட்டுக்களை குடித்து முடித்தார். ஒரு வழியாக அமீரும் இந்த எதார்த்தக் காட்சியை சிறப்பான முறையில் எடுத்த திருப்தியில் இருக்கிறார். 'ஆதிபகவன்' காதலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஜனரஞ்சகமான படமாக இருக்குமாம். இதில் தாய்-மகன் சென்டிமெண்டும் உண்டு. ஜெயம் ரவியின் அம்மாவாக சுதா சந்திரன் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு: ஆர்.பி.குருதேவ் மற்றும் கே.தேவராஜ். படத்தொகுப்பு: ராம் சுதர்சன்.

நதியாவுக்கு பதில் நமிதா

மயிரிழையில் உயிர் தப்பிய சமீரா!

பாடமாகும் ரஜினியின் படங்கள்

மன்மதனுக்கு பாராட்டு அம்பு எய்த ரஜினி

உதயநிதிக்கு த்ரிஷாவா? இலியானாவா?

அங்காடித் தெருவுக்கு முதல் பரிசு!

நற்பணி இயக்கத்தை கலைக்கவும் தயங்கமாட்டேன்: அஜித் ஆவேசம்

தனுஷின் 'மாப்பிள்ளை' முறுக்கு!

சீமான்-விஜய்யின் 'கோபம்'

Monday, December 13, 2010

கமலை வேடிக்கைப் பார்த்த சங்கீதா

காதலிக்கிற வயசுல காதல் வேனாம் - அனூப்குமார்

உதயநிதியின் கட்டுப்பாட்டில் உலக நாயகன்

ஐந்து நாயகிகளுடன் ஒரு கவர்ச்சி த்ரில்லர்

பாவத்தின் சம்பளத்தில் புவனேஸ்வரி

சரோஜாதேவிக்கு என்.டி.ராமராவ் தேசிய விருது

முன்ஜாமீன் கேட்கும் விஜயகுமார் - மஞ்சுளா

3 இடியட்ஸில் சூர்யா

த்ரிஷாவின் ஒரு நாள் ஆசை

விஜய் வருகைக்காக காத்திருந்த மீடியா

தள்ளிப்போனது மன்மதன் அம்பு வெளியீடு

அரவிந்த்சாமிக்கு விவாகரத்து வழங்கப்பட்டது

கவியரசரின் பாடல்கள் என்றும் மறக்க முடியாதவை! - சிவக்குமார்

இசை நிறுவனம் ஆரம்பித்த கௌதம் மேனன்

இயக்குநர் ஹரிக்கு கொலை மிரட்டலா

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்! - ரீமாசென்

தயாரிப்பாளர்களுக்கு தனுஷ் தந்த சலுகை

என்னையும், கார்த்தியையும் இணைத்துப் பேசுவது முட்டாள்தனம்! - தமன்னா

சினேகா அதிமுகவில் இணைவாரா

Wednesday, December 8, 2010

இளைஞன் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி!

இளைஞன் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி

படு பிசியாக லட்சுமி ராய்

பாலிவுட்டில் தடம் பதிக்கும் இலியானா

நான் யாரையும் 'காப்பி' அடிப்பதில்லை - கமல்

'3 இடியட்ஸ்'க்கு விஜய்யால் ஏற்பட்ட வில்லங்கம்!

விபச்சாரியா நடிக்க மாட்டேன் - த்ரிஷா

மழையால் மகிழ்ந்த படப்பிடிப்புகள்

வனிதா விஜயகுமாரின் அடுத்த குற்றச்சாட்டு!

வாய குடுத்து வாங்கிக் கட்டிய ஷம்மு

எஸ் சொன்ன சித்திக், நோ சொன்ன அசின்

மங்காத்தாவில் மோதும் இரு கும்பல்

இழப்பை ஈடு செய்த சூர்யா!

ரஜினியின் ஆன்மீகத் தேடலில் ஒரு மாற்றம்

'மன்மதன் அம்பு' பாடலுக்கு கண்டனம்

Saturday, December 4, 2010

சமையல்:காஷ்மீரி ஆலு தம்

சமையல்:காஷ்மீரி ஆலு தம்

பிரேமா ராவ், ஸ்ரீரங்கம்.
Kashmiri Aloo Dum - Cooking Recipes in Tamil
சப்பாத்தி, பூரிக்கு சரியான மேட்சுனா அது உருளைகிழங்குதான். அதுக்காக எப்பவும் அதையே சாப்பிட்டாலும் போரடிச்சுடும் இல்லையா... அதனால இந்த காஷ்மீரி ஆலு தம்மை டிரை பண்ணிப்பாருங்க சுவையும் மணமும் அருமையா இருக்கும். எல்லா பொருள்களும் அரைத்து விழுதுபோல உள்ளதால் சத்துக்கள் வீணாகாது. தயிர், கஸீரி மேத்தி சேர்த்திருக்கிறதால உடம்புக்கு நல்லது. குளிர்ச்சியும் கூட.....
தேவையான பொருட்கள்:
ஒரே அளவான சிறு வகை உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
உறைந்த ஆடையுடன் கட்டித் தயிர் - 1/2 லிட்டர்
மசாலா செய்ய:
(இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
கஸீரி மேதி - 2 ஸ்பூன் 
சிவந்த மிளகாய் - 4
நெய் - 3 ஸ்பூன்
தக்காளி ஜூஸ் - கெட்டியாக ஒரு கிண்ணம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* உருளைக்கிழங்கை வேக வைத்து உரிக்கவும்.
* டூத்பிக்கினால் கிழங்கு ஒவ்வொன்றையும் குத்திவிடவும்.
* வாணலியில் 3 ஸ்பூன் நெய்விட்டு உருளைக்-கிழங்குகளைப் போட்டு பொன்னிறமாக ரோஸ்ட் செய்யவும்.
* இஞ்சி முதல் மிளகாய் வரையுள்ள சாமான்களை வெண்ணெய் போல அரைத்து, உப்பு சேர்த்து ரோஸ்ட் ஆகிக் கொண்டிருக்கும் உருளைக் கிழங்குடன் போடவும்.
* இரண்டும் சேர்ந்து பொன்னிறமானதும், தயிர் முழுவதையும் கடைந்து ஊற்றவும்.
* தயிர் கொதித்து வற்ற ஆரம்பித்ததும் தக்காளி ஜூஸைச் சேர்த்து கொதிக்க விடவும்.
* குழம்புப் பதமாக வந்தவுடன் இறக்கவும்.

சமையல்:புரோகோலி கூட்டு

சமையல்:புரோகோலி கூட்டு

Diet Food: Broccoli Curry - Cooking Recipes in Tamil
உடம்பைக் குறைப்பதே பெரும்பாடு... என அலுத்துக்கொள்ளும் பெண்மணிகளே... உங்கள் எடையைக் குறைக்க எளிய வழி: வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை உணவில் புரோகோலி சேர்த்துக்கொள்ளுங்கள். எடை குறைவதுடன் ஆரோக்கியமாக வாழலாம். அரைவேக்காடுதான் சிறந்தது!
தேவையான பொருட்கள்:
புரோகோலி - 1/4 கிலோ
முழு பூண்டு - 1
வெங்காயம் - 1/4 (சிறிய துண்டு)
எண்ணெய் - 2 அல்லது 3 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
தண்­ணீர் - 1/4 கப்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை:
* புரோகோலியை அதன் தண்டு உட்பட (அரை இன்ச் அளவில்) நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
* பூண்டு பற்களை வட்ட வடிவில், சற்றுத் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய்விட்டு அதில் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை லேசாக வதக்கி, பிறகு நறுக்கிய புரோகோலியையும் அத்துடன் சேர்த்து வதக்கவும்.
* புரோகோலியின் பச்சை நிறம் மாறாத அளவுக்கு மட்டும் வதக்கிய பிறகு உப்பு, தண்ணீ­ர் சேர்த்து மூடி போடாமல் வேகவைக்கவும்.
* வெந்த பிறகு மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

சமையல்:பால் சுண்டைக்காய் பாயசம்

சமையல்:பால் சுண்டைக்காய் பாயசம்

எல்.ஆர்.கிஷோர்குமார்
Healthy Food: Turkey Berry Payasam - Cooking Recipes in Tamil
பாயாசம் எல்லோருக்கும் பிடித்தமான பானம். சுவையான பாயாசத்தையே ஆரோக்கியமானதாக மாற்ற, வேக வைத்து அரைத்த சுண்டைக்காயை சேர்த்து செய்து பாருங்கள்... சுண்டக்காயா..?! என கேட்பது புரியுது... செய்து பாருங்க உங்க குழந்தைகளுக்கு நீங்களே சொன்னாத்தான் இது சுண்டைக்காய் பாயாசம் என்பதே தெரியும். அந்தளவுக்கு கசப்பே இல்லாத சுவையான பானம்!
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த பால் சுண்டைக்காய் - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
திக்கான வெல்லக் கரைசல் - 1 கப்
திக்கான முதல் தேங்காய்ப் பால் - 1 கப்
முந்திரி - 10
திராட்சை - 20
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து, கழுவி, குழைய வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
* பால் சுண்டைக்காயை சுத்தம் செய்து, இடித்து கொஞ்சமாக தண்­ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்து, மிக்சியில் இட்டு அரைத்து, வடிகட்டி சாறை எடுத்துக் கொள்ளவும்.
* அடி கனமான பாத்திரத்தில் வெல்லக்கரைசலை எடுத்துக் காய்ச்சி இறுகும் நிலையில் சுண்டைக்காய் சாறு, பருப்பு மசியல், சேர்த்துக் கிளறி, இறக்கும் தறுவாயில் தேங்காய்ப் பால் சேர்த்து, நெய்யில் சிவக்க வறுத்து வைத்த முந்திரி திராட்சையைச் சேர்த்துக் கலக்கி சுவைக்கவும்.
* கசப்பு என்பதே இல்லாத ஆச்சரியமான ஆரோக்கிய பாயசம் இது

சமையல்:வேர்க்கடலை பிட்லா

சமையல்:வேர்க்கடலை பிட்லா

ஆதிரை வேணுகோபால், சென்னை
Indian Stew: Groundnut-Brinjal Pitla - Cooking Recipes in Tamil
சாம்பார் சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்துப்போய் விட்டதா..? சுவையான பிட்லா ட்ரை பண்ணுங்க. சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி.. இப்படி எல்லா வித அயிட்டங்களோட மேட்ச் ஆகும். வேர்க்கடலையோட மணமும் கத்தரிக்காயோட சுவையும் ஆஹா.....! நமக்கு வேலையும் மிச்சம். சுவைக்கு சுவையும் ஆச்சு. பின்ன என்ன...? செய்ய வேண்டியது தான் மிச்சம்!
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 50 கிராம்
பிஞ்சு கத்தரிக்காய் - 4
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 8
தனியா - ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன்
மிளகு - 10
வெந்தயம் - 1/4  டீ ஸ்பூன்
கசகசா - ஒரு டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை வேர்க்கடலை புளி கரைசல் - தலா 3 டேபிள் ஸ்பூன்
உப்பு, கடுகு, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* வேர்க்கடலை மற்றும் துவரம்பருப்பை தனித்தனியாக வேகவைக்கவும்.
* எண்ணெயில் காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், கசகசா ஆகியவற்றை வறுக்கவும்.
* வேகவைத்த வேர்க்கடலை + வறுத்த மசாலா சாமான் + ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்துருவல் மூன்றையும் மிக்ஸியில் மைய அரைக்கவும்.
* நீரில் கத்தரி மற்றும் தக்காளியை உப்பு சேர்த்து வேக விடவும்.
* வெந்தபின் புளிக்கரைசலை விடவும்.
* பிறகு அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலை விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
* 10 நிமிடம் கழித்து வெந்த துவரம் பருப்பை நன்கு மசித்து அதில் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
* பிறகு வாணலியில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் தாளித்துக் கொட்ட வேர்க்கடலை பிட்லை ரெடி!

சமையல்:கப்பக்கிழங்கு, முருங்கைக் கீரை அடை

சமையல்:கப்பக்கிழங்கு, முருங்கைக் கீரை அடை

ஜெனிஜாஸ்மின்
South Indian Recipe: Tapioca Adai - Cooking Recipes in Tamil
கிழங்கு வகைகளில் அதிக மாவுச் சத்து உள்ள கிழங்குதான் கப்பக்கிழங்கு. கோதுமை மாவை விட அதிகமான மாவுச் சத்து கப்பக்கிழங்கில்தான் உள்ளது. ஆனால் மற்ற சத்துக்கள் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் கப்பக்கிழங்கு குழந்தைகளுக்கு சிறந்தது. கப்பையை சாப்பிட்டுவிட்டு வேலைகள் ஏதும் செய்யாமல் இருந்தால் உடல் எடை அதிகரித்து விடும். இந்த கப்பக்கிழங்கோடு முருங்கைக் கீரை சேர்த்து செய்வதால் நார்ச்சத்து கிடைப்பதோடு ஜீரணத்துக்கும் உதவுகிறது. செய்து சாப்பிட்டுப் பாருங்கள் சுறுசுறுப்புடன் தென்படுவீர்கள்..!
தேவையான பொருட்கள்:
கப்பக்கிழங்கு - 1
பச்சரிசி - 2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
பாசிப் பருப்பு - 1/2 கப்
இஞ்சி - 1 இன்ச்
ப.மிளகாய் - 4
காய்ந்த மிளகாய் - 4
முருங்கைக்கீரை - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* கப்பக்கிழங்கை தோலுரித்து சுத்தம் செய்து, நன்றாகத் துருவி வைத்துக் கொள்ளவும்.
* அரிசி, பருப்பு, வகைகளை மூன்று மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
* ஊறியபின் சுத்தம் செய்து கொண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு, துருவிய கப்பக்கிழங்கு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* இந்த மாவை தோசைக்கல்லில் அடையாக வார்த்து முருங்கைக் கீரையைத் தூவி, வெந்தவுடன் திருப்பிப்போட்டு எடுக்கவும்.
* தொட்டுக் கொள்ள நாட்டுச்சர்க்கரை, அல்லது வெங்காயச் சட்னி வெகு பொருத்தம்.
* சரிவிகித சத்தான உணவு இந்த கப்பக்கிழங்கு முருங்கைக்கீரை அடை!

சமையல்:ரவை நக்கட்ஸ்

சமையல்:ரவை நக்கட்ஸ்

Indian Snacks: Rava Nuggets - Cooking Recipes in Tamil
"இந்த மழைக்காலத்துல சாப்பாடுதான் சரியா இறங்க மாட்டேங்கிறது... நல்லா சுடச்சுட ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடணும்தான் தோணுது.." என்று உங்கள் தோழிகளிடம் சொல்லுகிறீர்கள் அல்லவா?. அப்படின்னா.. இந்த ரவை நக்கட்ஸ் செய்து சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள். மழையோ.. வெயிலோ.. சுவை மட்டும் 'இன்னுங்கொஞ்சம் நாவில் பெய்யட்டும்' எனச் சொல்லும்!
தேவையான பொருட்கள்:
பாம்பே ரவை - 1 கப்
சேமியா - 1 கப்
வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
எலுமிச்சம்பழச்சாறு - 2 டீ ஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
* 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஒரு கடாயில் காய வையுங்கள்.
* அதில் வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சிறு தீயில் வதக்குங்கள்.
* பின்னர் ரவையையும் சேருங்கள்.
* 5 நிமிடம் நன்கு வதக்கியபின், சேமியாவை கையால் நன்கு நொறுக்கி சேருங்கள்.
* அத்துடன் மிளகாய்த்தூள், மல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள்.
* ஒரு பாத்திரத்தில் நாலரை கப் தண்­ணீர் கொதிக்க வைத்து, ரவை கலவையில் சேர்த்து நன்கு கிளறி இறுகும் வரை வேகவிடுங்கள்.
* கடைசியில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கிளறுங்கள்.
* ஆற வைத்து வேண்டிய வடிவத்தில் செய்துகொள்ளுங்கள்.
* மைதாவை சற்று கெட்டியாக கரைத்து, செய்து வைத்துள்ள ரவை நக்கட்ஸை அதில் நனைத்து எடுத்து, பிரெட் தூளில் புரட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
* தக்காளி சாஸ், இதற்குப் பொருத்தமான காம்பினேஷன்.

சமையல்:பட்டன் தட்டை

சமையல்:பட்டன் தட்டை

South Indian Snacks: Button Thattai - Cooking Recipes in Tamil
குடும்பத்தோடு மாலை நேரத்தில் உட்கார்ந்து கொரிக்க நறுக்கென ஒரு சிற்றுண்டிதான் இந்த பட்டன் தட்டை. கடைகளில் கிடைக்கும் பாக்கெட்டில் கிடைக்காத சுவையும், பாசமும் வீட்டில் நீங்களே செய்து பரிமாறும் போது உணர்ந்து கொள்வீர்கள்....!
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி - 2 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப் (பொட்டுக்கடலை நமுத்திருந்தால், லேசாக வறுத்து அரைக்கவேண்டும்)
பாசிப்பருப்பு மாவு - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்து அரைத்தது)
பச்சை மிளகாய் - 8
பெருங்காயம் - சிறிது
நன்கு புளித்த தயிர் - 1/4 கப் (அ) எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - 1 டீ ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
தேங்காய் துருவல் - 1/2 கப்
செய்முறை:
* புழுங்கலரிசியை நன்கு கழுவி, ஒரு மணி நேரம் ஊறவையுங்கள்.
* பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயம், தயிர், உப்பு சேர்த்து, நைஸாக (கெட்டியாக) அரைத்துக்கொள்ளுங்கள்.
* அதில் பொட்டுக்கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு சேர்த்து, நன்கு கெட்டியாகப் பிசையுங்கள்.
* அந்த மாவிலிருந்து சுண்டைக்காயளவு உருண்டைகள் எடுத்து, சிறு சிறு தட்டைகளாகத் தட்டிக்கொள்ளுங்கள்.
* மிதமான தீயில் எண்ணெயைக் காயவைத்து, தட்டைகளைப் பொரித்தெடுங்கள்.
* கொறிக்க வித்தியாசமான, சத்தான ஸ்நாக்ஸ்.

அமீர் விலகியதால் கோபமடைந்த எஸ்.ஏ.சி

ரஜினி வாழ்த்திய விஷ்ணு - ரஜினி திருமணம்

அரை டவுசருடன் பாடல் வெளியீட்டுக்கு வந்த ஆர்யா

'காவலன்' ட்ரெய்லர் வெளியீட்டு விழா

எந்திரனுக்கு மேலும் ஒரு வழக்கு

மன்மதன் அம்பு: வெளிநாட்டு உரிமை 3 கோடி

படப்பிடிப்பில் சூர்யா காயம்

Friday, December 3, 2010

பெப்சி கொண்டாடிய 'ஒருமைப்பாடு தினம்'

டிசம்பர் 10ல் 'கோ' பாடல் வெளியீட்டு விழா

பேசியதற்காக வருத்தம் தெரிவித்த ஆர்யா

பத்திரிகையாளர்களின் பாராட்டைப் பெற்ற 'தா'

வடிவேலு வீட்டு காமெடி!

சௌந்தர்யாவுக்கு ரஜினி கொடுத்த தெம்பு

விஷாலின் புது கெட்டப்!

7 தமிழர் விடுதலைக்கு குரல் கொடுப்போம்

7 தமிழர் விடுதலைக்கு குரல் கொடுப்போம்..Effective voice required for the redemption of 7 Tamils arrested in Rajiv's assasination - Tamil Katturaikal - General Articles
தமிழக சிறையில் நீண்ட நாள் சிறை வாழ்வை வாழ்ந்தும் போராடியும் வரும், நளினி, பேரறிவாளன், முருகன், சாந்தன், இராபட் பயாஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி இப்போது நாம் எழுப்புகிற குரல் இந்திய பேரரசுக்கு எதிராகவும் தமிழ்த் தேசியத்தின் விடுதலை குரலாக இது மாற வேண்டும்.
உலக அளவில் ஒரு கொலை வழக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஒரு வழக்கு இந்த வழக்காகத்தான் இருக்கும். அதேநேரத்தில் இவர்களுடைய விடுதலைக்கு இதுவரை யாரும் பெரிய அளவில் போராடாமல் இருப்பது அதை விட வேறு வேதனை ஒன்றும் இருக்க முடியாது. வெள்ளை நிற வெறி அரசை எதிர்த்து போராடிய "நெல்சன் மண்டேலா" 27 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டதும் அவரின் ஆதரவான உலக முழுக்காயுள்ள மனித உரிமையாளர்கள், பல நாட்டு தலைவர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்த பின்தான் அவரின் விடுதலை சாத்தியமாயிற்று.
அமெரிக்க கொடுஞ் சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் செவ்விந்திய மக்களின் தலைவர் "லியோனார்ட் பெல்டியர்". அவரின் விடுதலைக்கும் உலக முழுக்க உள்ள மனித உரிமைப் போராளிகள் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவரின் சிறை வாழ்வு இன்னும் முடிவு பெறாமல் நீடித்துக் கொண்டே போகிறது. அரசின் அதிகார எல்லைக்கு கட்டுப்பட்டு தன் பெரும் வாழ்வை சிறையில் கழித்துள்ளார்.
அமெரிக்க ஆப்ரிக்க மக்களின் உரிமைக்கு போராடிய "முமியா அபு ஜமால்" என்ற எழுத்துப் போராளி செய்யாத கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை ஏற்று 20 ஆண்டுகளுக்கு மேலாக தன் வாழ்வின் இளமைக் கால வசந்தத்தை தன் மக்களின் பால் ஏற்று வாழ்ந்து கொண்டுள்ளார். இப்படி எண்ணற்ற "மாமனிதர்" தன் நேசித்த மக்களுக்காகவும், தன் தேசம், மொழி, இனம், பண்பாடு, தங்களுடைய தொன்ம முறை காக்கவும் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர்.
அப்படியான வகையில் இந்திய பேரரசின் அதிகாரக் கொலை வெறிக்கும் உட்பட்டு தன் வாழ்வை இழந்து சிறையில் வாடி வரும் நளினி, பேரறிவாளன், உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலைப் போராடுவதும் அதை உலக முழுக்க கொண்டு செல்வதும் நம் கடமை என்று உணர்ந்து செயலாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
ராசீவ் காந்தி கொலை வழக்கில் என்ன நடந்தது? என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த 21.5.1991 இல் ராசீவ் காந்தி திருப்பெரும்புதூரில் கொலை செய்யப்பட்டார்.
ராசீவ் கொலை வழக்கில் நேரடியாக சம்பந்தப் பட்ட தணு சம்பவ இடத்திலேயே மரணடைந்தார். சிவராசன், சுபா ஆகியோர் பெங்களூரில் தற்கொலை செய்து கொண்டனர்.
சி.பி.ஐ. இவ்வழக்கில் 26 பேரை கைது செய்தது. 14.6.1991 அன்று நளினியும் அவரது கணவர் முருகனும் சென்னை சைதாப்பேட்டையில் வைத்து கைது செய்யப்பட்டனர். பேரறிவாளன் வீட்டிலிருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கு தடாச் சட்டத்தின் கீழ் போடப்பட்டதால் 14.6.1991ல் கைது செய்யப்பட்ட நளினி 60 நாட்கள் கிரீன்வேஸ் சாலையில் உள்ள மல்லிகை இல்லத்தில் (சி.பி.ஐ. விசாரணை அலுவலகம்) வைத்து விசாரித்தனர். அப்போது நளினி 2 மாத கர்ப்பமாக இருந்தார்.
சாதாரணமாகவே காவல் நிலையத்தில் ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை காவல் துறையினர் எப்படி விசாரிப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். அதிலும் இராசீவ் கொலை வழக்கு என்பதால் சொல்லத் தேவையில்லை. ஒவ்வொருவரையும் தலைகீழாகத் தொங்க வைத்து நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து சித்திரவதை செய்து விசாரணை செய்தனர். இப்படியான விசாரணை 60 நாட்கள் நடந்தது. பின்னர் அனைவரையும் செங்கல்பட்டு தனிக் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். 17.1.93 அன்று புதிதாக கட்டப்பட்ட பூந்தமல்லி சிறப்பு தனிச் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
சிறையில் ஒருவர் மற்றவருடன் பேச முடியாதபடி அடைத்து வைத்தனர். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 19.1.1994ல் சாட்சி விசாரணை தொடங்கியது. நளினி சம்பவ இடத்தில் இருந்தார் என்பதால் அவருக்கு குற்றம் நடப்பது தெரிந்திருந்தது என்று சி.பி.ஐ. தெரிவித்தது. அதேபோல் பேரறிவாளன் 9 வோல்ட் பேட்டரியை வாங்கிக் கொடுத்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இப்படி 26 பேரின் மீதும் ஏதோ ஓர் வகையில் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருந்தனர் என சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இவ் வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து 28.1.1998 அன்று சிறப்பு தடா நீதிமன்றம் அனைவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்து.
29.1.1998 அன்று நளினி உள்ளிட்டவர்கள் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டனர். 26 பேரின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு (தடா வழக்கில் விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது) அய்யா நெடுமாறன் தலைமையில் உருவாக்கப்பட்ட 26 பேர் உயிர் காப்புக் குழு போராடி பொருள் சேர்த்து மூத்த வழக்கறிஞர்கள் என். நடராசன் அவர்களை வழக்காட நியமித்தது. 11.5.1999 அன்று இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட 26 நபர்களில் 19 நபர்களை இராசீவ் கொலையில் தொடர்பில்லாதவர்கள் என உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
நளினி, பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை வாழ்நாள் (ஆயுள்) தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது. நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் தனது தீர்ப்பில் நளினிக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது என்று கூறி ஆயுள் தண்டனை வழங்க உத்தரவிட்டார். எனினும் மற்ற இரு உச்ச நீதிமன்றம் நீதிபதிகளும் (வாத்வா, முகமது காதிரி) மரண தண்டனையை உறுதி செய்ததால் மூன்றில் இரண்டு பேர் என்ற பெரும்பான்மை விகிதத்தில் நளினிக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதேபோல் நீதியரசர் வாத்வா அவர்கள் இராபட் பயாஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோரை குற்றமற்றவர்களாக கருதி விடுதலை செய்து உத்தரவிட்டார். எனினும் மற்ற இரண்டு நீதிபதிகளும் ஆயுள் தண்டனையை உறுதி செய்த காரணத்தால் ராபட் பயாசும் ஜெயக்குமாரும் விடுதலையாக முடியவில்லை.
நளினி உள்ளிட்டவர்களின் மீதான நிரூபிக்கப்பட்ட குற்றம் என்னவெனில் அவர்கள் ராசீவ் கொலை சதியில் ஈடுபட்டார்கள் என்பதுதான்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் மரண தண்டனையை நீக்கவேண்டும் என தமிழக ஆளுநருக்கு கருணை மனு அளித்தனர். கருணை மனுக்களை ஆளுநர் பாத்திமா பீவி நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து நளினி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். நளினியின் சார்பாக வழக்காடிய மூத்த வழக்கறிஞர் சந்துரு (தற்பொழுது உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்) நளினியின் கருணை மனுவை தமிழக அமைச்சரவை கூடித்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் தானாகவே தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என வாதிட்டார். இதனை உயர் நீதிமன்றம் ஏற்று நளினி உள்ளிட்ட நால்வரின் கருணை மனுவை தள்ளுபடி செய்தது தவறு என தீர்ப்பளித்தது.
இதற்கிடையில் மனித உரிமையாளர்கள், முன்னால் இந்திய குடியரசு தலைவர் வி.வி.கிரியின் மகள் மோகினிகிரி உள்ளிட்ட பலரின் வேண்டுகோள், திருமதி சோனியா காந்தியின் கடிதம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக நளினியின் கருணை மனுவை பரிசீலனை செய்த தமிழக அரசு 24.4.2000 அன்று அரசியல் அமைப்புச் சட்டம் சரத்து 161 இன்படி (அரசு ஆணை எண். 406, உள்துறை நாள் 24.4.2000) நளினியின் மரண தண்டனை வாழ்நாள் (ஆயுள்) தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
இவர்கள் சிறையில் அனைத்து சிறையாளிகளுக்கு அளிக்கப்படும் அனைத்து சட்ட விதிகளும் இவர்களுக்கு பொருந்துவது இல்லை. ரவிச்சந்திரன் தன் தாய் தந்தையரை பார்ப்பதற்கு விடுப்பு (பரோல்) பல முறை கேட்டு 10 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. மற்ற வாழ்நாள் சிறையாளிகள் இராபட் பயாஸ் செயக்குமார் போன்றவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
நளினி, முருகன், கணவன் மனைவி என்ற முறையில் சிறையில் சந்திக்க முடியுமே தவிர தன் உறவினர்களை, தன் சொந்த ஒரு மகளை வெளியில் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நளினி, முருகன், மகள், அரித்திரா, தன் தாய் தந்தையரை பார்க்க தமிழினத தலைவர் கலைஞர் ஆட்சியில் நான்கு ஆண்டு காலமாக மறுக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளனர் இவ் எழுவர்.
அதே நேரத்தில் தமிழக அரசு அண்ணா பிறந்த நாளில் முன் விடுதலை அளிக்கும். இவ்வகையில் இதுவரை 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையாளர்கள் 2,000க்கும் மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் முன் விடுதலை
நளினியின் தண்டனை வாழ்நாளாக (ஆயுளாக) குறைக்கப்பட்ட 2000 ஆம் ஆண்டுக்குப் பின் அறிஞர் அண்ணாவின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்துச் சிறைகளில் உள்ள 10 ஆண்டுகள் தண்டனை கழித்த 61 வாழ்நாள் (ஆயுள்) தண்டனை சிறையாளிகள் 15.9.2001 அன்று முன் விடுதலை செய்யப்பட்டனர். இந்த 61 சிறையாளிகள் (கைதிகள்) விடுதலை செய்யப்பட்ட போது நளினி, இரவிச்சந்திரன், இராபட் பயாஸ், செயக்குமார் ஆகியோர் 10 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை முடித்திருந்தனர். ஆனால் அவர்களை தமிழக அரசு முன்விடுதலை செய்யவில்லை.
2006ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 15.9.2006 அன்று 10 ஆண்டு கள் தண்டனை முடித்த 472 ஆயுள் தண்டனை சிறையாளிகள் முன் விடுதலை செய்யப்பட்டனர்.
2007ம் ஆண்டு தமிழக முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழாவை முன்னிட்டு 14 ஆண்டுகள் தண்டனை முடித்த 27 வாழ்நாள் (ஆயுள்) தண்டனை சிறையாளிகள் முன்விடுதலைச் செய்யப்பட்டனர். (இவர்கள் அனைவரும் சிறையிலிருந்து பரோல் விடுமுறையில் வீட்டிற்கு வந்து சிறைக்குத் திரும்பாமல் ஓடி விட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்)
2007 ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 16.9.2009 அன்று 10 ஆண்டுகள் தண்டனை முடித்த 190 ஆயுள் தண்டனைச் சிறையாளிகள் முன் விடுதலை செய்யப்பட்டனர்.
2008ம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் உள்ள 7 ஆண்டுகள் தண்டனை கழித்த வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற 1405 கைதிகள் முன் விடுதலை செய்யப்பட்டனர்.
2009ம்ஆண்டு வாழ்நாள் (ஆயுள்) தண்டனைச் சிறைவாசிகள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை. ஆனால் 10 ஆண்டுகள் தண்டனை முடித்த 13 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட 10 சிறையாளிகள் முன் விடுதலை செய்யப்பட்டனர்.
(இவர்கள் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 13 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். இவ் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்தது) 2010 ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான 15.92010 அன்று 70 வயதைக் கடந்த 13 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
நளினி, இராபட் பயாஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகியோரின் தண்டனை வாழ்நாள் (ஆயுள்) தண்டனையாக மாற்றப்பட்ட பின்னர் (2001ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை) தமிழக அரசு இதுவரை 2155 வாழ்நாள் தண்டனை சிறையாளிகளை விடுதலை செய்துள்ளது.
மறுக்கப்பட்ட முன் விடுதலை
ஒரு கொலையை நேரடியாகச் செய்து தண்டனை பெற்ற வாழ்நாள் சிறைக் கைதிகள் 7 ஆண்டுகள் / 10 ஆண்டுகள் / 14 ஆண்டுகள் கழித்த பின்னர் விடுவிக்கப்பட்டபோதும், 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, இராபட் பயாஸ், செயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்படவில்லை. (இவர்கள் யாரும் கொலை செயலில் நேரடியாக ஈடுபடவில்லை. இராசீவ் கொல்லப்பட போகிறார் என்பது இவர்களுக்கு முன்பே தெரியும் என்பதுதான் குற்றச்சாட்டு)
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் நளினிக்குப் பின் தண்டனை பெற்று 2155 வாழ்நாள் (ஆயுள்) தண்டனை சிறையாளிகள் விடுவிக்கப்பட்ட போதும் நளினி உள்ளிட்டவர்கள் ஏன் விடுவிக்கப்படவில்லை.
அறமும் நீதியும் அனைவருக்கும் ஆகுக
தமிழக அரசு நளினி உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய மறுக்கிறது. காரணம் அரசியல். கொல்லப்பட்டவர் காங்கிரஸ் கட்சி தலைவர் இராசீவ் காந்தி என்பதால்தான்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 161 இன்படி எந்த ஓர் தண்டனையையும் மாற்றியமைக்க, நீக்கம் செய்ய, தண்டனை குறைக்க ஆளுநருக்கு அதிகாரம் அளித்துள்ளது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் 2001 முதல் 2008 வரை தமிழக அரசு 2155 வாழ்நாள் சிறையாளிகளை விடுதலை செய்துள்ளது. இந்த 2155 சிறையாளிகளும் யாரைக் கொன்றார்கள் என்று பார்த்து முன் விடுதலை செய்யவில்லை. மதுரையில் சி.பி.ஐ. கட்சியின் நகர் மன்ற உறுப்பினர் லீலாவதியைக் கொன்றவர்கள் 7 ஆண்டு தண்டனை முடிந்ததும் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் நளினி, ரவிச்சந்திரன், இராபட் பயாஸ், செயக்குமார்க்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்?
காந்தியைக் கொன்ற வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே தன்னை முன் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் வாழ்நாள் தண்டனை என்பது "உயிரோடு இருக்கும் வரையிலான சிறைத் தண்டனை" என வரையறுத்து விடுவிக்க மறுத்தது. ஆனால் கோபால் கோட்சேயை மராட்டிய மாநில காங்கிரஸ் அரசு விடுதலை செய்தது.
ஆந்திராவில் மேற்கு வங்கத்தில், கேராளவில் மக்களுக்காக போராடிய அரசியல் வாழ்நாள் சிறையாளிகளை 7 ஆண்டுகள் கழித்தவர்களையும் விடுதலை செய்தது. அப்படி தமிழகத்தில் பல்வேறு அரசியல் இயக்க போராளிகளையும் விடுதலை செய்யப்பட்டனர். அப்படி எண்ணற்ற அரசியல் சிறையாளிகளை விடுதலை செய்த அரசு ராசீவ் கொலை வழக்கில் உள்ள நளினி, ரவிச்சந்திரன், இராபட் பயாஸ், செயக்குமார் போன்றோர்களை விடுதலை செய்ய மறுப்பது அநீதியாகும்.
குரல் கொடுப்பதும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை தமிழக முழுக்க மக்களிடம் எடுத்துச் சொல்வதும் அதை அரசியல் கோரிக்கையாக மாற்றுவதும் இன்றைய தேவை.
மரண தண்டனை சிறையாளிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் அவர்களின் மரண தண்டனை நீக்க கோருவதும் அவர்களை விடுதலைக்கு தமிழகம் தழுவிய இயக்கம் எடுப்பதும் மனித உணர்வுள்ள அனைவரின் கடமையாகும்.
"பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் 26 பேர் மரண தண்டனை நீக்க செய்யக் கோரி தமிழகத்தில் எழுந்த அந்த விடுதலைக் குரலைத் தொடர்ந்து "நால்வர் உயிர் நம்மவர் உயிர்" கோரி தமிழகம் தழுவிய அந்த விடுதலை கோரிக்கை நாம் இன்று ஈழத் தமிழர் விடுதலை என்ற கோரிக்கையை முன் எடுக்க வேண்டும். நம்முடைய குரல் மரண கொட்டடியில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தனை மீட்கவும், அவர்கள் விடுதலை காற்றை சுவாசிக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.
நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், சொல்வது போல "பேரறிவாளன் ஆன்மா உயர்வானது. விலை மதிப்பற்றது. அதன் விழுமியங்கள் உன்னதமானவை. சிறையில் அடைப்பட்டிருப்பதாலேயே அவர் குற்றவாளியாகி விடுவதில்லை. உண்மையில் அவர் தன் சக மனிதர்களின் மீட்சிக்காக உழைக்கிறார்".
அதேபோல் நீதிபதி எம்.சுரேஷ் அவர்கள், குடியரசுத் தலைவர் தமது கருணை அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். இந்த கருணை அதிகாரத்தின் வாயிலாக மன்னிப்புப் பெற்று விடுதலை பெறுவதற்கான அனைத்து தகுதியும் பேரறிவாளனுக்கு உண்டு.
மரண தண்டனை மனிதத் தன்மையற்றது என்பதைச் சொல்லத் தேவையில்லை. யாவற்றிலும் மோசமானது என்னவென்றால் பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் என்ற மத்திய காலப் பழக்கத்தை அது நிரந்தரமாக்குகிறது என்பதே. அக்காலத்தில் இருந்து வெகு தூரம் முன்னேறி விட்டது.
நீதிக்காக வேண்டி ஒருவரின் உயிரைப் பறிப்பது நாகரிக நடைமுறையாகாது என்று அது உணர்ந்து விட்டது. சமயப் பற்றுடன் வாழ்பவர்களுக்கு வேறு ஒரு சிந்தனையும் உள்ளது. இறைவன் கொடுக்கும் உயிரை மனிதர் பறிக்க உரிமையில்லை.
ஒருவரின் உயிரைப் பறிக்கும் அளவிற்குப் பழிக்குப் பழி வாங்கும்படி அறிவுரை சொல்லும் புனித நூல் எதுவும் இல்லை. மரண தண்டனை என்பது உயிரைப் பறித்துப் பழி தீர்ப்பதே தவிர வேறல்ல என்கிறார் பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நையார்.
ராசீவ் கொலை வழக்கில் அனைத்து வகையிலும் அடிப்படை மனித உரிமை மீறல் நடந்துள்ளது என்பதை எண்ணற்ற அறிஞர்களின் மேற்கோள் காட்ட முடியும்.
மரண தண்டனை பெற்று மரண கொட்டடியில் உள்ள 3 தமிழர்களை மீட்பது தமிழகத்தின் கடமை, நமது உரிமை என்பதை உணர்ந்து, கட்சி, சாதி, மத இயக்க எல்லைகளைக் கடந்து, அடிமைத் தமிழகத்தின் விடுதலைக் குரலாக நம் கோரிக்கை ஒலிக்க வேண்டும்.
அதேபோல் 4 தமிழர்களின் 20 ஆண்டு சிறை வாழ்வின் துயரத்தை கொடுமையை எதிர்த்தும் 3 தமிழர்களின் மரணக் கொட்டடியிலிருந்து மீட்கவும் உறுதிமிக்க போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். 7 தமிழர்கள் விடுதலைக் காற்றை சுவாசிப்பதற்கும் நாம் வழிவகை செய்ய வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின் கடமை. அதேபோல் ஒவ்வொரு தமிழனும் உண்மை உணர்வுடன் அவர்களோடு கைகோர்க்க வேண்டும்.
அதை நோக்கி நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம். ஒருங்கிணைவோம். மனித உரிமை நாள் திசம்பர் 10 அன்று சென்னையில் ஒன்றுகூடுவோம் உரிமையை நிலைநாட்டுவோம்.

வீணாகும் தானியங்கள்: வெறும் சோற்றுக்கா வந்ததிந்தப் பஞ்சம்

தேசத்தின் சாபக்கெடுவும் - தோல்பாவை பிரதமரும்

தேசத்தின் சாபக்கெடுவும் - தோல்பாவை பிரதமரும்!
 
"When truth is replaced by silence,the silence is a lie"
- Yevgeny Yevtushenko

உச்சநீதிமன்றம் இந்த முறை பாரதப் பிரதமரை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. உச்சநீதிமன்றம் பாரதர் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் "பதினைந்து மாதங்களாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்தது ஏன்?" என்று காட்டமாக கேட்டுள்ளது. மறுபுறம் ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்த முறைகேட்டிலும் நான் ஈடுபடவில்லை. எனக்கு முன் பதவி வகித்தவர்கள் எந்த நடைமுறையைப் பின்பற்றினார்களோ, அதே நடைமுறையைத் தான் நானும் பின்பற்றினேன். பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல்படிதான், அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன என்று கூறுகிறார். தவறு ஆ.ராசா மீதா அல்லது மன்மோகன்சிங் மீதா? ஒருவேளை ஆ.ராசா முறைகேடாகச் செயல்பட்டிருந்தால் கூட அது பிரதமர் பார்வைக்கு வராமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வளவு பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழல். சரி வேண்டாம். ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற சொல்லை அவைக்குறிப்பிலிருந்து எடுத்துவிடலாம். வருமான இழப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். தேசத்திற்கு இவ்வளவு பெரிய வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் பிரதமரின் கவனக்குறைவு என்று கூறலாமா? கவனக்குறைவின் மறுபெயர் திறமையின்மை என்று கூறலாமா? எண்ணிப் பார்ப்பதற்கே சில விநாடிகள் எடுத்துக்கொள்ளும் இலக்கத்திலிருக்கும் மிகப்பெரிய தொகையில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. மிகச் சிறந்த பொருளாதார மேதையும், தேசத்தின் முதன்மை பொறுப்பிலிருக்கும் பிரதமருமான மன்மோகன்சிங் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அமைதி காத்தது விநோதமாக இருக்கிறது. இப்படியொரு தோல்பாவை பிரதமர் நமக்கு வாய்த்தது, ஸ்பெக்ட்ரம் ஊழலை மீண்டும் மன்னிக்கவும், வருமான இழப்பை விட தேசத்தின் மாபெரும் இழப்பு.
மன்மோகன்சிங் மிகச் சிறந்த பொருளாதார மேதையாக இருக்கலாம். ஆனால் அவரை ஒருபோதும் சிறந்த நிர்வாகத்திறன் மிக்கவராகவோ அல்லது அரசியல் ராஜதந்திரம் மிகுந்தவராகவோ சொல்ல முடியாது. சிறந்த நிர்வாகத்திறன் இருந்திருந்தால் அவருக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கவனக்குறைவு ஏற்பட்டிருக்காது. அல்லது ஸ்பெக்ட்ரம் விசயம் சாமர்த்தியமாக மூடி மறைக்கப்பட்டிருக்கும். ராஜதந்திரம் மிகுந்தவராக இருந்திருந்தால் அவர் பலிகடா ஆகியிருக்க மாட்டார். வேறு யாராவது தலையில் பழியைப் போட்டு எஸ்கேப் ஆகியிருப்பார். பாவம், இப்போது என்ன செய்வது என்று விழிபிதுங்கி நிற்கிறார். இந்த தேசம் பல விநோதமான பிரதமர்களைச் சந்தித்துள்ளது. விழிக்க வைப்பதற்கு கஷ்டப்பட்ட- உறங்கிக் கொண்டே இருந்த பிரதமர், சிரிக்க வைக்க கஷ்டப்பட்ட பிரதமர், இப்போது முதல் முறையாக பேச வைப்பதற்கே கஷ்டப்படும் ஒரு பிரதமரைத் தேசம் சந்தித்துள்ளது. உச்ச நீதிமன்றத்திற்குக் கூட பதில் தராமல் அவர் மவுனமாகவே இருந்திருப்பார். பலமுனை தாக்குதல்களுக்குப் பிறகு நேற்று வேறுவழியில்லாமல் பத்து பக்க விளக்கத்தை அவர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் மன்மோகன்சிங் அத்திப் பூத்தாற்போல சில நேரத்தில் மவுனம் களைவார். அப்போது வெளிப்படும் அவரது மேதமையும், நிர்வாகத்திறனும் அபாரமாய் இருக்கும். உதாரணம்:- சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் மன்மோகன்சிங்கைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டது. இந்திய உணவுக் கழகத்தின் உணவுக் கிடங்குகளில் முறையாகச் சேமித்து வைக்காமல் பாழாகும் அரிசியை, எலிகள் தின்றது போக மீதமிருக்கும் புழுக்கள் நெளியும் வீணாய்ப் போன அரிசியை வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழை பாழைகளுக்கு இலவசமாக விநியோகிக்கலாம் என்று கூறியது. மறுநாள் பத்திரிகைகள், மன்மோகன்சிங்கைச் சந்தித்து அவரது கருத்தைக் கேட்டார்கள்.
"வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 37 விழுக்காடு ஏழைகள் அனைவருக்கும் இலவசமாக உணவுப் பொருட்களை வழங்க வேண்டுமா? உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பது நடைமுறை சாத்தியமற்றது. இது எப்படி சாத்தியம்?" பத்திரிகைகளிடம் மன்மோகன்சிங் கேட்டார்.
ஒரு பத்திரிக்கையாளர் இதைத் தெளிவாக மன்மோகன்சிங்கிடம் விளக்கினார். "உங்களை 37 சதவீதம் பேருக்கு இந்த அரிசியைத் தரச் சொல்லவில்லை. வீணாய்போகும் அரிசியை மட்டும் எவ்வளவு பேருக்குத் தரமுடியுமோ அவ்வளவு பேருக்குத் தந்தால் போதும்".
உடனே மன்மோகன்சிங் "நான் உச்சநீதிமன்றம் தீர்ப்பை முழுமையாக படிக்கவில்லை. படித்துவிட்டுச் சொல்கிறேன்" என்று சொன்னார். மன்மோகன்சிங் ராஜதந்திரம் மிகுந்தவராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? முதல் கேள்விக்கே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் படிக்கவில்லை. படித்துவிட்டுச் சொல்கிறேன் என்று பதில் சொல்லி டகால்டி வாங்கியிருக்கலாம். அபூர்வமாக இப்படி வாயைத் திறக்கும் நேரங்களில் கூட "ஙே" என்று மாட்டிக்கொண்டு பல்பு வாங்குவது அவருக்கு வாடிக்கையாக ஆகிவிட்டது.
நேற்று மன்மோகன்சிங் பேசியதோ இன்னுமொரு மாபெரும் உளறல். மன்மோகன்சிங் பத்திரிகைகளிடம் இப்படி பேசியுள்ளார். பார்லிமென்டில் ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பற்றிய எந்தவொரு விவாதத்துக்கும் மத்திய அரசு தயாராக உள்ளது. விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்படும். இதற்கு பி.ஜே.பி. பதில் சொல்லியுள்ளது. ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பற்றி ஏற்கனவே போதுமான அளவு விவாதித்துவிட்டோம். இனி தேவை நடவடிக்கை மட்டுமே. உங்கள் ஆட்சியில் நடந்த முறைகேடுகளுக்கு நீங்களே பொறுப்பு. நீங்கள்தான் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். பி.ஜே.பி. தரப்பிலிருந்து நறுக்கு தெறித்தாற்போல பதில் சொல்லியுள்ளார்கள். இப்போது நடக்கும் அமளி துமளி களேபரங்களில் மன்மோகன்சிங்கிற்கு என்ன பேசுகிறோமென்றே தெரியவில்லை.
பத்திரிகைகளிடம் மன்மோகன்சிங் அடுத்துச் சொன்னது இன்னும் சூப்பர் உளறல்.
"இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் லஞ்சம்தான், முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதை சோதனைக் காலமாகவே கருத வேண்டும். பிரதமராக இருந்தாலும் கூட, சில நேரங்களில் உயர்நிலைப்பள்ளி மாணவனைப் போலத்தான் என்னைக் கருதுகிறேன். ஒரு தேர்விலிருந்து அடுத்த தேர்வுக்கு மாணவர்கள் செல்வதைப் போலவே, ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்துக்கு நான் போகிறேன்" என்று பேசியுள்ளார். இதைக்கேட்ட பத்திரிகையாளர்களின் வெடிச்சிரிப்பு அடங்க கொஞ்ச நேரம் ஆனதாம்.
உண்மையில் அவரது பேச்சும், செயல்பாடுகளும் உயர்நிலைப்பள்ளி மாணவனைப் போலத்தான் இருக்கின்றன. தேசத்தின் பிரதமரும், சிறந்த பொருளாதார மேதையுமான ஒருவரின் நிலைமை இவ்வளவு பரிதாபத்துக்கும், நகைப்புக்குரியதுமாய் மாறியிருப்பதை என்னவென்று சொல்வது? பிரான்சில் டர்பன் அணிந்த சீக்கியர்கள் தாக்கப்பட்ட பிரச்சினை எழுந்தபோது, தனிப்பட்ட முறையில் பேசி அதனைத் தீர்த்து வைத்தவர் மன்மோகன்சிங். ஆனால் தலைபோகும் விசயமொன்றில் தேசமே பற்றியெரியும்போது அவர் கொஞ்சம் கூட வாயைத் திறக்கவில்லை. காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி, பிரதமர் மன்மோகன்சிங் மேல் எந்தத் தவறும் இல்லை. அவர் திறமையானவர் என்று விளக்கம் தந்துள்ளார். ஜனார்த்தன் திவேதி சொல்வது போல நம் பிரதமர் நேர்மையானவர்தான். லஞ்சம் வாங்காதவர்தான். கறைபடியாத கைகளுக்குச் சொந்தக்காரராகவே இருக்கட்டும். ஆனால் பல நேரங்களில் கையாலாகத் தனம் என்பது கறைபடியாத கைகளை விட மோசமானதாக அமைந்துவிடுகிறது. தேசத்துக்கு தேவை நேர்மையான தோல்பாவை பிரதமரல்ல. சர்வாதிகாரமாகவே இருந்தாலும் முடிவுகளைச் சுயமாகச் சிந்தித்து எடுக்கக் கூடிய பிரதமரே.
 

ராசராச சோழனின் கோயில் பெருமிதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஜாதி!

ராசராச சோழனின் கோயில் பெருமிதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஜாதி!

The rational creed and caste behind Raja Raja Chozhan's fame - Tamil Literature Ilakkiyam Papers மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு, தமிழக அரசு கோவையில் நடத்திய "உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு" ஆரவாரங்கள் இன்னும் அடங்கவில்லை. ஆனால், விழா நடத்திக் களிப்பதில் வித்தகரான இன்றைய முதல்வர், தற்பொழுது தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாண்டு நிறைவு விழாவை (செப்டம்பர் 22 அன்று தொடங்கி 26 வரை) அமர்க்களமாய்க் கொண்டாடி இருக்கிறார். தாங்க முடியாத பொருளாதார நெருக்கடிகள், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், சாதி சண்டைகள், சமயப் பூசல்கள் போன்ற பல்வேறு சுமைகளின் பாரம் தாங்காமல் - தமிழனின் முதுகெலும்பே முறிந்து போகும் நிலையில் இவையெல்லாம் எதற்காக? வீழ்ந்து கிடக்கும் தமிழினம், மாமன்னன் ராசராசனின் வெற்றிப் பெருமிதங்களின் நினைவூட்டலால் தலைநிமிரும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்விழா நடத்தப்பட்டதா?
ராசராசனின் பெயரை விண்ணளவு உயர்த்திக் காட்டும் கலைப்பெட்டகமாய் இன்றளவும் உயர்ந்து நிற்பது தஞ்சைப் பெரிய கோயில். ராசராசனின் ஆட்சிக் காலம் பற்றிய செய்திகளில் பலருக்கும் பல்வேறு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலைத் திறனுக்கு சான்றாய் தனிச் சிறப்போடு நிற்கிறது தஞ்சைப் பெரிய கோயில். கி.பி. 1009இல் இவன் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட இக்கோயில் கோபுரத்தின் உயரம் 216 அடி. அக்கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள கல் 80 டன் எடை கொண்டதாகும். 25.5 அடி சதுரம் உடைய அந்த ஒற்றைக் கல்லை கோபுரத்தின் உச்சிக்குக் கொண்டு செல்ல 10 கி.மீ. தொலைவுக்கு சாரங் கட்டித்தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். இன்றைக்கும் தஞ்சை அருகே "சாரப்பள்ளம்" என்கிற ஊர் உள்ளது. இரும்பும், சிமெண்டும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அகிலமே வியக்கின்ற இந்த அருஞ்செயலைச் செய்து முடித்த நம் தமிழ் முன்னோர்களின் ஆற்றல்சால் கட்டடக் கலைத்திறன் போற்றுதற்கு உரியதே!
ஆனால், இவ்வளவு பெரிய அறிவு நுட்பமும் கலைத் திறனும் கொண்ட அந்தக் கால உழைப்புச் சமூகத்தின் உள்ளார்ந்த வாழ்நிலை என்ன? வான் முட்ட எழுந்து நிற்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் கடைக்காலில் புதைந்து கிடக்கும் உழைக்கும் மக்களின் கண்­ணீரும் செந்நீரும் - இந்த ஆயிரமாம் ஆண்டு விழா ஆர்ப்பாட்டப் பேரிரைச்சலில் நம்மால் அடையாளம் காணப்படுமா?
சாதிப் பிரிவுகள் அற்றுச் சமத்துவ வாழ்வு வாழ்ந்த தொல் தமிழ்க் குடியில், தொல்காப்பியர் காலத்திலேயே பிளவுகள் தொடங்கி விட்டன. அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் என்கிற நால்வகைப் பிரிவும் செய்யுந் தொழிலின் அடிப்படையில்தான் முதலில் அமைந்தது. பின்னர் அதுவே சாதியச் சழக்காய் நிலைத்து விட்டது என்று சமூக ஆய்வாளர்கள் சிலர் எழுதுகின்றனர். ஆனால், தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலேயே பார்ப்பனரின் முதுகில் பூணூல் மாட்டப்பட்டு விடுகிறது.
நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய
- தொல். பொருள். மரபியல் 66
முப்புரி நூல் (பூணூல்), தண்ணீ­ர் சொம்பு, முக்கோல், அமர்வதற்கான இருக்கை ஆகிய அந்தணர்க்குரியன என்பது இதன் பொருள்.
ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன
- தொல். பொருள். அகத்திணையியல் 28
என்கிற நூற்பா, "ஓதுதல்" ஆகிய "கல்வி" என்பது, உயர்ந்தோரான அந்தணர்க்குதான் உரியது என்று சொல்லப்பட்டுவிட்டது.
இதன் தொடர்சியானது, பின் நாட்களில் பாறைபோல் கெட்டிப்பட்டுப் பிற்கால சோழப் பேரரசில் அசைத்துப் பார்க்கவே முடியாத பார்ப்பன மநுதரும ஆட்சியாகவே நிலைத்துவிட்டது. ராசராசன் காலத்தில் ஆயிரக்கணக்கான அயல்நாட்டுப் பார்ப்பனர்கள் அலையலையாக இங்கே இறக்குமதி செய்யப்பட்டனர். தமிழ் நாட்டுக் கோயில்கள், கல்வி நிறுவனங்கள், மடங்கள் ஆகியவற்றில் அந்தப் பார்ப்பனர்கள் - அர்ச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும், வேத பாராயணம் செய்வோராகவும் அமர்த்தப்பட்டனர்.
வேத நெறியைத் தழைத்தோங்கச் செய்ய, சோழ மன்னர்கள் பார்ப்பனர்களுக்குப் பொன்னையும் பொருளையும் வாரிவாரி வழங்கினார்கள். அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் தனி நிலங்களும், முழு முழுக் கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அவ்வாறு அரசர்களால் வழங்கப்பட்ட பார்ப்பனக் கிராமங்கள் - அக்கிரகாரம், அகரம், சதுர்வேதிமங்கலம், பிரமதேயம் என்கிற பெயர்களில் செல்வச் செழிப்போடு விளங்கின. அந்தக் கிராமங்களில் அரசனின் ஆணைகள்கூட செல்லுபடி ஆகா. எவ்வகையான வரிகள், கட்டணங்கள், கடமைகள் ஆகியவற்றிலிருந்தும் அவற்றுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டன.
ராசராச சோழன், அவன் மகன் ராசேந்திர சோழன், குலோத்துங்க சோழன் என நீளும் பிற்காலச் சோழர் ஆட்சியில், உழைக்கும் மக்களை கசக்கிப் பிழிந்து மிகக் கொடிய முறையில் பல்வேறு வகையான வரிகள் வசூலிக்கப்பட்டன. அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தில் இருந்துதான் விண்முட்ட ஆலயங்கள் எழுப்பப்பட்டன. மநுதர்ம விதிகள் சட்டமாக்கப்பட்டன. பார்ப்பனர்கள் கேட்டவை கேட்டபடி அளிக்கப்பட்டன.
சோழர் கால ஆட்சிச் சிறப்புகள் பலவற்றுள் ஒன்றாகச் சொல்லப்படுவது அவர்கள் நாடு, கூற்றம் என தம் ஆட்சிப் பரப்பைப் பல உட்கூறுகளாகப் பிரித்து ஆண்டார்கள் என்பதாகும். நிலங்களை அளந்து நாட்டைப் பகுத்தமையும், ஊர்ச்சபைகள் அமைத்துக் குடிமக்கள் நலன் காத்தமையும் சிறப்பாகப் பேசப்படுகிறது. சோழர் காலத்துக் குடவோலை முறை, பள்ளிப் பாடநூல்களில் தவறாமல் இடம் பெறும் ஒரு செய்தியாகும். இதுபற்றி உத்தரமேரூர்க் கல்வெட்டுகளில் பின் காணப்படுவன:
"உத்தரமேரூர் கிராமம் முப்பது தொகுதிகள் அல்லது குடும்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இக்குடும்புகள் ஒவ்வொன்றும் சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதியுடையவர் ஒருவரை நியமனம் செய்தல் வேண்டும். அவ்வாறு குடும்புகளால் நியமனம் பெறுவோர் அனைவரும் கூடிக் குடும்புக்கு ஒருவராக மொத்தம் முப்பதின்மர் குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஓலை நறுக்குகளில் பெயர்கள் எழுதப்படும். அவை ஒரு குடத்தில் இடப்பட்டுக் குலுக்கப்படும். பின் சபைக்குத் தேவைப்படும் உறுப்பினர்களை, ஒரு சிறுவனை ஏவி கைவிட்டு எடுக்கச் செய்வர்". இந்த முறையில் அமைந்த குடிநாயக மாண்பைப் பெருமையாகப் பேசுவோர் ஒன்றை மறைத்து விடுகின்றனர்.
கிராம நிர்வாகத்தில் முதன்மைப் பாங்காற்றும் அந்த முப்பது உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டிய தகுதிகளாக, உத்தரமேரூர்க் கல்வெட்டுகள் உரைப்பன யாவை?
அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்த அளவு கால்வேலி நிலமாவது இருக்க வேண்டும். சொந்தமாய் வீட்டுமனை இருக்க வேண்டும். 35 வயதிற்குக் குறையாமலும் 70 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டிய அவர்களுக்குரிய மிகமிக முதன்மையான தகுதி, அவர்கள் வேதத்துடன் தொடர்பு கொண்ட மந்திர பிராமணங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேதத்தை ஓதும் திறனைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்காணும் ஊர் உறுப்பினர்களின் தகுதிகளில் இருந்து சோழர் கால கிராம ஆட்சி என்பது யாரால், யாருடைய நலனுக்காக நடைபெற்றுள்ளது என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. அதுமட்டுமல்ல, சோழர் கால மெய்கீர்த்திகள் அனைத்திலும் அம்மன்னர்கள் சாதி ஒழுக்கத்தை நிலைநாட்டுவதையே தம் சீரிய அரச கடமையாகக் கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. ஆரிய ஒழுக்கங்களைப் பாராட்டும் சாத்திரங்களும் புராணங்களுமே நாடு முழுவதும் கற்பிக்கப்பட்டடுள்ளன. அரசர்கள் அமைத்த கல்வி நிறுவனங்களில் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பயிற்றுவிக்கப்படவில்லை. மாறாக, இதிகாசங்கள், சிவதருமம், ராமநுசபாடியம், மீமாமிசை, வியாகரணம் போன்ற வடமொழி இலக்கிய இலக்கணங்கள் சொல்லித் தரப்பட்டுள்ளன.
சோழர் ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் பிழை இல்லாமல் தமிழை எழுதவோ, படிக்கவோ தெரியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான சோழர் காலத்துக் கல்வெட்டுகள், எழுத்துப் பிழைகள் மலிந்தனவாய்க் காணப்படுகின்றன. இவற்றைக் கொண்டு பார்த்தால், அந்தக் கல்வெட்டுகளை செதுக்கிய கல்தச்சர்கள் குறைந்த எழுத்தறிவு கொண்டவர்களாய் இருந்திருக்க வேண்டும். இதில் வேடிக்கை என்னவெனில், செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், சேக்கிழார், கம்பர், புகழேந்தி போன்ற பெரும்பெரும் தமிழ்ப் புலவர்கள் - பல்லவர் மற்றும் சோழர் ஆட்சிக் காலங்களில் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சோழர் காலத்தில் எழுதப்பட்ட சைவ, வைணவ இலக்கியங்கள் பலவும் வடமொழிக் கலப்பை மிகுதியாகக் கொண்டிருந்தன.
தமிழினத்திற்கே பெரும் தலைக்குனிவாய் உள்ள சாதி வேற்றுமைகள் பல்கிப் பெருகி வேர்விட்டது சோழர்கால ஆட்சியில்தான் என்பது, வரலாறு பதிவு செய்து வைத்துள்ள மாபெரும் உண்மையாகும். வேளாளர், பிள்ளைமார் முதலியோரும், செட்டிமார்களும் மற்றவர்களைவிட தாம் உயர்ந்தோர் என்றும், பார்ப்பனர்க்கு அடுத்த நிலையுடையவர்கள் தாம் தாம் என்றும் தருக்கி வாழ்ந்தது, சோழர் கால ஆட்சியில் கெட்டிப்பட்டுப்போன பெருங்கேடாகும்.
வரலாற்றில் மாறாத வடுவாக நிலைத்துவிட்ட வலங்கை இடங்கைக் குலங்களின் குருதி சிந்திய போராட்டங்கள் பற்றி கே.கே.பிள்ளை அவர்கள் தமது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"சோழர் காலத்தில் ஓங்கி வளர்ந்த குல வேறுபாடுகள், மிகவும் தீய விளைவுகளுக்கு களனாக இருந்தது வலங்கை - இடங்கை என்னும் பிளவாகும். இவ்விரு பிரிவினருக்கும் இடையே பல கடும் பூசல்கள் நேரிட்டுள்ளன. இப்பூசல்கள், சோழப் பேரரசின் காலத்திற்கு முன்னே தோன்றி, விசயநகரத்துப் பேரரசர்கள் காலத்தில் தொடர்ந்து வளர்ந்து வந்து - ஆங்கிலேயர் அரசாட்சியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் நடைபெற்று வந்தன. சென்ற நூற்றாண்டில் இப்பூசல்களின் காரணமாக சென்னையின் தெருக்களில் மனித ரத்தம் சிந்தியதுண்டு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலங்கை - இடங்கை வேறுபாடுகள் திடீரென்று மறைந்துவிட்டன. இப்போது மக்களுக்கு அப்பெயர்களின் பொருளே இன்னதென விளங்குவதில்லை. இந்த வேறுபாட்டை வரலாற்று நூல்களின் பக்கங்களில்தாம் விளங்கக் காண்கின்றனர். ஒன்பது நூற்றாண்டுகளாகத் தமிழரின் வாழ்க்கையை அலைக்கழித்து வந்த சமூகக் கேடு ஒன்றன் தோற்றமும் முடிவும் வரலாற்று விளக்கங்காணாத மறைபொருள்களாகவே உள்ளன". ("தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்" - பக். 321)
சோழர் ஆட்சிக் காலத்தில் பெண்களின் நிலை மிகவும் இரங்கத்தக்கதாய் இருந்தது. இரு கண்கள் எனப் போற்றப்பட வேண்டிய பெண்கள் பலரையும் கோயில்களில் தேவரடியார்கள் ஆக்கிய பீடு மிக்கப் பெரும் பணியைச் செய்தவன் மாமன்னன் ராசராசன் ஆவான். இன்று ஆயிரமாம் ஆண்டு காணும் இதே தஞ்சைப் பெருவுடையார்க் கோயில் திருத் தொண்டுக்காக, ராசராசன் நானூறு தேவரடியார்களை அமர்த்தினான். அவர்களுக்குத் தனித்தனியே வரிசையாக வீடுகள் அமைத்துக் கொடுத்தான் என்று தஞ்சைக் கோயில் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. சோழர் காலத்தில், பெண்கள் உடன்கட்டை ஏறும் கொடுமையும் நடந்துள்ளது என்பதற்குப் பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழர் பண்பாடு என்று பெருமை பேசப்படுகிறது. ராசராச சோழனுக்கு உலோகமாதேவி, சோழமாததேவி, திரைலோக்கியமாதேவி, பஞ்சவன்மாதேவி, அபிமான வல்லி, லாடமாதேவி, பிருதிவிமாதேவி, மீனவன்மாதேவி, வீரநாராயணி, வல்லவன்மாதேவி, வனவன்மாதேவி எனப் பன்னிரெண்டு மனைவியர் இருந்தனர் என, வே.ஆனைமுத்து தாம் எழுதிய "தமிழ் நாட்டில் பண்பாட்டுப் புரட்சி" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை சார்ந்த நேரிய வாழ்வும், நெடிய வரலாறும், நிறைந்த இலக்கியச் செல்வங்களும் பெற்ற ஒப்பற்ற இனமாகத் தமிழர் வாழ்ந்தனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆனால், உண்மையான இயங்கியல் கண்ணோட்டத்தில் தமிழர் வரலாற்றை அணுகுவதும், மீள் ஆய்வு செய்வதும் மிகமிக இன்றியமையாததாகும். தமிழர் வீழ்ச்சிக்குப் பெருங்காரணமாய் அமைந்த வர்ணாசிரம ஆதிக்கம், சாதியக் கொடுமைகள், பெண்ணடிமைத் தனம், உழைக்கும் மக்களுக்கு எதிரான கொடிய சுரண்டல் போன்ற அழிக்க முடியாத வரலாற்றுக் கறைகளைப் பிற்காலச் சோழர் ஆட்சி, மிகமிக அழுத்தமாகவே பதிவு செய்துள்ளது. சாதி, மத ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமத்துவப் பொதுமைச் சமூகத்தை தமிழ் மண்ணில் அமைத்திட முயலும் யார்க்கும் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாம் ஆண்டு நிறைவு விழா, எந்த வகையிலும் நிறைவைத் தராது என்பது உறுதி!
சோழர் காலத்தில் உழைக்கும் மக்களிடமிருந்து கட்டாயமாக பெறப்பட்ட வரிகள்
மீன்பாட்டம்: மீன்பிடி தொழிலுக்கு மீனவர் செலுத்திய வரி
வட்டி நாழி: கழனிக்குத் தண்ணீ­ர் பாய்ச்சிய நாழிகையைக் கணக்கிட்டு அதன்படி உழவர்கள் செலுத்திய தண்­ர் வரி
கண்ணாலக் காணம்: திருமணம் செய்து கொண்டால் செலுத்தப்பட்ட வரி
வண்ணாரப்பாறை: துணி வெளுப்பவர்கள் செலுத்திய வரி
குசக்காணம்: குயவர்கள் (மண்பாண்டம் செய்வோர்) செலுத்திய வரி
தறிக் உறை: தறி நெய்யும் நெசவாளர் செலுத்திய வரி
தரகுப்பட்டம்: தரகர்க்கு விதிக்கப்பட்ட வரி
ஆட்டுக்கறை: ஆடு வளர்ப்பவர் செலுத்த வேண்டிய வரி
நல்லெருது: எருது, பசு வளர்ப்போர் செலுத்த வேண்டிய வரி
ஓடக் கூலி: ஓடம் செலுத்துவோர் கட்டிய வரி
ஈழம் பூட்சி: கள் இறக்குவோர் செலுத்திய வரி
- கே.கே. பிள்ளை எழுதிய "தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்", பக். 314, 315 வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113.
வெட்கங்கெட்ட ராசராசன்கள்
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராசராசனுக்கு, அக்கோயிலுக்கு உள்ளே சிலை வைக்க - அன்றும் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் முயன்றபோது, அதற்கு மத்திய தொல் பொருள் துறை அனுமதியளிக்க மறுத்துவிட்டது. இதனால் கோயிலுக்கு வெளியே அச்சிலையை முதல்வர் நிறுவினார். இப்பெருங்கோயிலைக் கட்டிய ராசராசன், பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டவன். ஆனால், பிறப்பின் அடிப்படையில் அவன் சூத்திரன் என்பதால், அக்கோயிலின் கருவறைக்குள் நுழைவதற்கு அவனுக்கு அனுமதியில்லை.
அரசப்பெருமிதங்களில் கரையும் இன்றைய ராசராச சோழன்களுக்கும் அதுதான் நிலை! ஆனால், இதுகுறித்து ராசராசனும் வெட்கப்படவில்லை; ஆயிரமாண்டுகள் கடந்தும் பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை மக்கள் சூத்திரர்களாகக் கருதப்பட்டு, கோயில் கருவறைக்குள் நுழைய முடியாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வராமல், கோயில் கட்டடப் பெருமிதங்களில் திளைக்கும் தமிழ்ச் சமூகமும் வெட்கப்படவில்லை

வைரமுத்து வெளியிட்ட 'சிங்கையில் குருஷேத்திரம்' ட்ரெய்லர்

பத்து கோடி பட்ஜெட்டில் பரத்

இஷா தியோலின் தமிழ்ப்பட ஆசை

இம்மாதத்தின் திரைத் திருவிழா

புதுமுக நாயகிக்கு தனுஷ் கொடுத்த கிப்ட்

முதல்முறையாக இணையும் சூர்யா-செல்வராகவன்

ஜோடி இல்லை; ஏமாந்த சசிகுமார்

தமிழில் தொடர்ந்து நடிக்க ஆசை! - ப்ரியாமணி

எஸ்.பி.பி.க்கு அபுதாபியில் பாராட்டு விழா

உதயநிதிக்கு நாயகி கிடச்சாச்சு!

நட்சத்திரங்கள் பங்குபெறும் 20-20!