Sunday, August 29, 2010

நல்வழி நாடுவீர் பாடல்

ஒழுங்கு முறை விதிகளெள்ளாம் தெரிஞ்சுக்க வேணும் தம்பி


ஒன்று பட்டு வாழ நீயும் கத்துக்கணும் தம்பி


வரிசைமுறை பண்புகளை தெரிந்துகொண்டாலே தம்பி


வம்புவழக்கு இல்லாமல் வாழ்க்கை இனித்திடும் தம்பி


பெற்றோர்க்கு எந்நாளும் உதவிட வேண்டும் தம்பி


பெரியோரை மதித்திடவே பழகிட வேண்டும் தம்பி


பொது இடங்களில் போகும்போது அமைதிக்காக்கணும் தம்பி


பெரியோர்களால் போற்றிடவே வாழ்ந்திட வேண்டும் தம்பி.

No comments:

Post a Comment