Wednesday, November 3, 2010

என்ன செய்வது என தெரியவில்லை காரணம் உன் மௌனம்

.

என்ன செய்வது என தெரியவில்லை காரணம் உன் மௌனம்

நினைத்து கூட பார்கவில்லை
நீயும் நானும் காதலர் ஆவோம் என்று

சுதந்திரமாய் திரிந்த என்னை இன்று
சூழ்நிலை கைதியக்கிவிட்டாய் நீ

சில நாள்களாக நீ என்னை தவிர்பதாக
உணர்ந்து தவித்து போகிறேன்

எதை நினைப்பது எதை மறைப்பது எதை முடிப்பது
எதுவும் தெரியவில்லை எனக்கு

முதல் இடம் போய்
பத்தாவது இடம் கிடைத்தது படிப்பில்

முதல் மரியாதையை போய்
அவ மரியாதை நடக்கிறது என் வீட்டில்

என்ன செய்வது என தெரியவில்லை
காரணம் உன் மௌனம்...............

No comments:

Post a Comment