Wednesday, November 3, 2010

வலிகள் நிறைந்த என்காதல்

வலிகள் நிறைந்த என்காதல்

தமிழில் புதிய எழுத்துகளை

கண்டுபிடித்தால் சொல்லுங்கள்

அதில் தேடலாம்

என் காதலின் புனிதத்தை

சொல்லும் வார்த்தைகளை...


அவள் மேல் நான் அப்படி

ஒரு காதல் செய்தோம்.


ஆனால் இப்போது

எல்லாமும் முடிந்து போயிருந்தது

என் இதயம் வெற்றிடமாய் இருக்கிறது.


அதில் நான் வடித்த

கண்ணீர் துளிகள்

ஒரு கடலையே உருவாக்கியது



எந்த அளவுக்கு 'வழியவழிய'

காதலித்தேனோ

அந்த அளவுக்கு

'வலிக்க வலிக்க' ரணங்களையும்

கொடுத்து விட்டு போனாள் அவள் .


எல்லாமும் முடிந்து போயிருந்தது.


இப்போதும் கூட

தினமும் கல்லூரியில் பார்க்கிறேன்


எதுவும் நடக்காதது போல
செல்கிறாள் அவள்

எதுவும் அறியாதவனாய் செல்கிறேன் நான்

No comments:

Post a Comment