Friday, January 14, 2011

கருத்தகண்ணன் CO ரேக்ளா ரேஸ்

யதார்த்த வாழ்க்கையில் நடக்கும் உண்மை சம்பவங்களைத் தொகுத்து, 'கருத்தகண்ணன் CO ரேக்ளா ரேஸ்' என்ற புதிய படம் தயாராகிறது. இரண்டு இளைஞர்களின் வாழ்க்கையில் நடைபெறும் திடீர் சம்பவங்களால் ஏற்படும் விபரீதங்களை கதை சித்தரிக்கிறது. அந்த 2 இளைஞர்களில் ஒருவராக சுபாஷ் என்பவர் நடிக்கின்றார். மற்றொரு இளைஞராக வி.ரிஷிராஜ் என்பவர் நடிக்கின்றார். இவர் நடிப்பதோடு அல்லாமல் ரோஷன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இவர்களுடன் புதுமுகங்கள் சவுந்தர்யா, சாந்தி, ஸ்டாலின், வெள்ளை பாண்டி, கோடாங்கி, உத்தமன் ஆகியோரும் நடிக்கிறார்கள். சி.எச்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.டி.அண்ணாதுரை படத்தொகுப்பை மேற்கொள்ள, ஆர்.கே.சுந்தர் இசையமைக்கிறார். சுருளிப்பட்டி சிவாஜி வசனம் எழுதியிருக்கிறார். ஏ.செந்தில் ஆனந்தன் கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார். படத்துக்காக, ஒரு ரேக்ளா பந்தயக் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment