Friday, January 14, 2011

108 தையல்

108 தையல்

"நான் பாடம் நடத்தும்போது அவன் ஏன்டா வெளியில போறான்...?" "அவனுக்குத் தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு சார்...!"

"ஏன் எனக்கு விவாகரத்து கிடைக்காதுன்னு சொல்றீங்க...?" "ஒரே நேரத்துல மூணு பேரை விவாகரத்து பண்ணணும்னு சொல்றீங்களே...!"

"கல்யாண மண்டபத்துல ஏன் அவரை எல்லாரும் திட்டறாங்க...?" "வீடியோ எடுக்கறப்ப 500 ரூபா நோட்டை எடுத்துக் காட்டிட்டு, மொய் எழுதறப்ப ஐம்பது ரூபா எழுதினாராம்!"

"வறுமையின் காரணமா நிறைய பொய் சொல்லிட்டேன்னு புலம்பறீங்களே... அப்படி என்ன பொய் சொன்னீர் புலவரே...?" "தங்களைப் புகழ்ந்து ஆயிரக்கணக்கில் பாடல்கள் பாடியதைத் தான் சொல்கிறேன் மன்னா...!"

"டாக்டருக்கு ஏதோ வேண்டுதலாம்..." "அதுக்காக? பேஷன்ட்டுக்கு ஆபரேஷன் பண்ணிட்டு 108 தையல் போடறதெல்லாம் ரொம்ப ஓவர்!"

No comments:

Post a Comment