Friday, January 14, 2011

ரயில்வே ஸ்டேஷன்

ரயில்வே ஸ்டேஷன்

"கபாலி.... நீ தினமும் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போடணும்னு சொன்னேனே.... ஏன் வரலை?" "எந்த ஸ்டேஷன்னு சொல்லாததால, ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிட்டேன் ஏட்டய்யா...!"

"வாங்கின காய்கறியை ஏன் அப்படியே வச்சிருக்கே...?" "இத்தனை விலை கொடுத்து வாங்கினதை எடுத்துச் சமைக்க மனசு வரலை!"

"ஆனாலும் அவர் அநியாயத்துக்கு முன்ஜாக்கிரதை பேர்வழியா இருக்கார்..." "என்ன செய்தார்...?" "தனக்கு கொலஸ்ட்ரால் இருக்குங்கறதுக்காக கோயில்ல தேங்காய் உடைக்கறதையே நிறுத்திட்டாரே....!"

"காதலிச்ச உங்களைக் கைவிட முடியலை..." "அதனாலே...?" "கல்யாணம் பண்ணிக்கிட்டு டைவர்ஸ் பண்ணப் போறேன்!"

"என்னய்யா இது... எவ்வளவு குடிச்சாலும் போதையே ஏறலை! தண்ணி நிறைய கலந்துட்டீங்களா....?" "தலைவரே... அது தண்ணி மட்டும்தான்! இப்ப நீங்க பார்ல இல்ல... மீட்டிங்ல இருக்கீங்க!"

No comments:

Post a Comment