Wednesday, November 3, 2010

அதிர்கிறதே என் இதயம்

சற்றுமுன் நீ நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கிறது வீதி

எனினும்
அதிவேக ரயிலொன்று
கடந்துபோன தண்டவாளம்போல்
இன்னும் அதிர்கிறதே
என் இதயம்

No comments:

Post a Comment