Saturday, October 30, 2010

சுதந்திர தினம்

சுதந்திர தினம்

உன் குலம்
அழிஞ்சேபோச்சுன்னு
குதிச்ச
நா குளத்துல
கைய வச்சதுக்கு
கொச கொசன்னு
வழியிர குருதி காயத்தோட
அண்ணன் பிணம் வந்தப்போவ
அடிவயித்த புடிச்சிகிட்டு
அப்பவே போயிட்டா ஆத்தா
அடிச்சி புடிச்சி
அப்பனுக்கும் போட்டானுவோ
பொய் வழக்குகள
மேல் சட்டையே போடவிடாம
பொரட்டி பொரட்டியெடுத்துட்டு
கையில குடுக்குற
இத்துனூண்டு
கொடியும் குண்டூசியும்
கேடுகெட்டு நா
கொண்டாடனுமா
சுதந்திர தினம்

No comments:

Post a Comment