கண் பார்வை தெளிவடைய...
கொத்தமல்லித் தழை நிறைய கிடைக்கும் காலங்களில் தயிர் பச்சடியாய் தினமும் சாப்பிட்டால், கண் பார்வை தெளிவடையும்.
சப்பாத்திக்கள்ளி பூவை கழுவி சுத்தம் செய்து விழுதாக அரைக்க வேண்டும். அந்த விழுதை கட்டியின் நிலைக்கேற்ப தொடர்ந்து கட்டி வந்தால் கட்டி உடைந்து ரணம் தானாக ஆறிவிடும்.
கீழாநெல்லி இலைகளைக் கொண்டு வந்து தண்ணீர்விட்டு, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, கசாயம் இறக்கி அந்த கசாயத்தை ஒரு சிறிய டம்ளரில் அரை டம்ளர் வீதம் எடுத்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் மூன்றுநாள் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
குப்பைமேனி இலைகளை உப்புடன் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகள் இருக்கும் இடத்தில் தேய்த்துக் குளித்தால் சொறி, சிரங்குகள் நீங்கும்.
No comments:
Post a Comment