Tuesday, September 28, 2010

2020-ல் இந்தியா?

2020-ல் இந்தியா?
 அர்த்தநாரீஸ்வரரின் ஆளுகைதான் இங்கு எங்கும் தலைவிரித்து ஆடுகிறதோ என்று எண்ண தோன்றுகிறது.
"
மேல் தட்டு மன்னர் - அடித்தட்டு மக்கள்
விண்வெளி வெள்ளோட்டம் - வயல்வெளி வெள்ள ஓட்டம் வெள்ளம் - வறட்சி" இன்னும் பட்டியல் ஏராளம்,
2020-ல் இந்தியா?
இந்திய தேசம் வல்லரசு ஆகிவிடலாம், ஆனால் என் இனத் தமிழன் அன்றும் ஏர்பூட்டி வயற்காட்டிற்குத்தான் நடந்து கொண்டிருப்பான் .
"
அவன் அடுத்த வேலை சோற்றுக்கு!"
"அவன் கண்டவையோ ஏராளம், வறட்சியில் பட்டினிச்சாவு, வெள்ளத்தில் பொட்டலச்சோறு, அழுகிய பயிர்கள், உணவிற்கு எலிக்கறி, இன்னும் எத்தனையோ!"
"எல்லாவற்றையும் தாண்டி, அவன் தன் வாழ்க்கையை தொடங்கிய தொலைவிலேதான் இன்றும் இருக்கிறான், முன்னேற்றம் இன்றி!
"
தமிழகத்தின் மீது சோக ரேகைகள்
இன்றும் படர்ந்து கொண்டுதான் இருக்கின்றன - வறண்ட நதிகளாய்!"
இந்தியா முன்னேறுகிறது? ஆம் இந்தியா முன்னேறுகிறது.
"மென்பொருள் தயாரிக்கும் இந்தியனுக்கோ மாதத்திற்கு பல லகரங்கள், உணவுப்பொருள் உற்பத்தியாக்கும் இந்தியனுக்கு? வருடந்தோறும் அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகைதான் - அவன் வருட வருமானமோ?....."
"உழவனின் அரிசி என்ன அற்பமாகிவிட்டதா? மறந்துவிட்டாயா மனிதனே, உன் இறப்பிலும் கூடவருவது வாய்க்கரிசிதான்!"
தோழனே, நம் நாடு 2020-ல் வல்லரசாகிவிடும், அதில் ஐயமில்லை - அன்று நம் உழவுத்தோழனை சிற்றரசனாக்க வேண்டாம், ஒரு சராசரி மனிதனாகவாவது அவன் களிப்பாக வாழட்டுமே?

No comments:

Post a Comment