Friday, October 1, 2010

போடா போட்டிக்காக ஒட்டமெடுத்த சிம்பு

சிம்பு-வரலட்சுமி நடிக்கும் 'போடா போடி' படத்தின் படப்பிடிப்பு கனடாவில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது சிம்பு இருப்பதோ சென்னையில். இன்றோ நாளையோ அவர் திரும்பி கனடாவுக்கு ஓட வேண்டும். ஏன் இத்தனை அவசரமாக இந்த சென்னை பயணம்? வேறொன்னுமில்லீங்க... அனுஷ்காவின் கால்ஷீட் அப்புறம் கிடைக்காது என்பதால்தான் இந்த அவசர பயணம். வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடி அனுஷ்காதான் என்றாலும், அவருக்கு இருக்கிற டைட் ஷெட்யூலில் இப்படத்திற்காக இடையில் மூன்று நாட்கள் ஒதுக்கிக் கொடுத்தாராம். இதில் ஒரு பாடலை எடுத்துவிடலாம் என்பது கணக்கு. ஆனால் உடன் ஆட வேண்டிய சிம்பு கனடாவில். வேறு வழியில்லாமல் அவரை அவசரம் அவசரமாக புறப்பட்டு வரச்சொன்னார்களாம். இப்படி கிளம்பிவிட்டால் என்னாவது என்ற அச்சத்தில் சிம்புவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்திருந்தார்களாம் கனடாவிலிருக்கிற தயாரிப்பாளர்கள். எப்படியோ நிலைமையை எடுத்துச் சொல்லிதான் சென்னைக்கே வந்தாராம் சிம்பு. வந்த வேலையை முடித்துவிட்டு உடனே கனடா போகவில்லை என்றால், பூகம்பம் வெடிக்குமே என்பதால்தான் இந்த அவசர ஓட்டமாம். தேங்கா பறிக்கணும்னா மரத்துல ஏறித்தானே ஆகணும்.......

No comments:

Post a Comment