Friday, November 12, 2010

பன்றிக்காய்ச்சல்: பயம் வேண்டாம்!

பன்றிக்காய்ச்சல்: பயம் வேண்டாம்!

டாக்டர் ப.உ.லெனின் No need to get scared of Swine Flu! - Food Habits and Nutrition Guide in Tamil
இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நோய் "பன்றிக் காய்ச்சல்". இந்த நோய் எப்படி ஏற்படுகிறது? இதன் அறிகுறிகள் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன? என்பதை பார்ப்போம்.
பன்றிக் காய்ச்சல் நோய் என்பது பன்றிகளின் சுவாச உறுப்பைத் தாக்கி கடுமையான காய்ச்சல் மற்றும் இறப்பை ஏற்படுத்தும் "ஸ்வைன் புளூ வைரஸ் டைப்" என்னும் வைரஸால் ஏற்படும் நோயாகும். பன்றிகளை மட்டுமின்றி பறவைகள், குதிரை மற்றும் மனிதர்களையும் இந்த வைரஸ் தாக்கி நோயை ஏற்படுத்த வல்லது. இந்த வைரஸில் H1 N1, H1 N2, H3 N2 போன்ற வைரஸ் உட்பிரிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பன்றிகளுடன் நேரடித் தொடர்புடைய மனிதர்களுக்கு இந்நோய் அந்த வைரஸ் மூலம் தொற்றிக் கொள்கிறது. ஐரோப்பாவில் 1956-ம் ஆண்டே 17 மனிதர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. 1976-ம் ஆண்டு நியூஜெர்சியிலும் காணப்பட்டது.
பன்றிகளிலிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவும் வேகம் குறைவுதான் என்றாலும் பாதிக்கப்பட்ட மனிதனிலிருந்து இன்னொரு மனிதனுக்கு இந்நோய் மிக வேகமாக பரவும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, சளி, இருமல், தொண்டை எரிச்சல் போன்றவை இருக்கும். சில நேரங்களில் வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்படும். பாதிக்கப்பட்ட மனிதர்கள் இருமும்போதும், தும்மும் போதும் இந்த H1 N1 வைரஸ் மிக வேகமாக மற்றவர்களுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் மரணத்தையும் ஏற்படுத்த வல்லது இந்த நோய்!
பன்றிகளை பராமரிப்பவர்களுக்கும், பன்றிகளுக்கு அருகே வசிப்பவர்களுக்கும் இந்நோய் எளிதில் தொற்றுகிறது. பின்னர் பாதிக்கப்பட்ட மனிதரிடமிருந்து மற்றவர்களுக்கு மிக எளிதாகவும் விரைவாகவும் பரவுகிறது. பன்றி இறைச்சி உணவு மூலம் இந்நோய் பரவ வாய்ப்புகள் இல்லை. பன்றிகளுக்கு பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் மனிதர்களுக்கு எந்தத் தடுப்பூசியும் இல்லை. இந்நோயால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு வைரஸூக்கு எதிரான மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்நோய்க்கு "நியூரோமினிடேஸ் இன்கிபிடார்ஸ்" வகையைச் சார்ந்த மருந்துகள் பலனளிக்கும். தற்போது மெக்சிகோவிலும், அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ்களில் பன்றி, பறவைகள் மற்றும் மனிதர்களுக்கான மரபணுக்களும் ஒரு சேர அமைந்துள்ளது என்பது அதிர்ச்சி தரும் தகவலாகும். இந்த மாதிரியான ஒரே அமைப்பைச் சார்ந்த நுண்ணுயிரிகளின் அல்லது வைரஸ் அமைப்பு இதுவரை உலகில் எங்குமே இல்லை. எனவே இந்த புதிய வைரஸ், மனிதர்களை அதி விரைவாக பரவித் தாக்கக் கூடியது. ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இந்நோய் பரவத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 2004-ம் ஆண்டு டெல்லி, மிசோராம், மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் இந்நோய் பரவல் ஏற்பட்டு, அது கால்நடை துறையினரால் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பன்றிகளுக்கு பன்றிக் காய்ச்சல் பரவல் வந்ததில்லை. இதற்கு காரணம், இங்கு மேலை நாடுகளைப்போல் பன்றி வளர்ப்பு மிகப் பெரிய தொழிலாக இல்லை என்பதுதான். விலங்குகளுக்கான அனைத்து நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் அரசு நிறுவனம் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி தேவையில்லை என கருதி உற்பத்தி செய்வதில்லை. இந்தியாவின் தட்பவெப்ப சூழ்நிலையில் அதாவது கடும் வெப்பத்தில் இந்த வைரஸ் கிருமிகள் எவ்வளவுதான் தாக்குப் பிடித்தாலும் மிக அதிகபட்சமாக நான்கு மணி நேரத்திற்கு மேல் இவை உயிருடன் இருக்க முடியாது. அதனால் அந்த வைரஸால் நோயை பரப்பவோ, தொற்ற வைக்கவோ முடியாத ஒரு மயக்கமான மந்த நிலையில் அந்த வைரஸ்கள் மறைந்து போகிறது. அதனால் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற அதி பயங்கர வெப்ப நாடுகளில் இந்நோய் வரவே சாத்தியமில்லை என கால்நடை அறிவியலாளர்கள் உறுதிபடக் கூறுகிறார்கள். ஆனால் இந்த டைப் ஏ H1 N1 வைரஸூடன் "இன்புளுயன் H1 வைரஸ்" சேர்ந்து கொண்டால் வைரஸ் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். இது பன்றிக் காய்ச்சல் மாதிரியான அறிகுறிகளைக் கொண்டுள்ளதால் குழப்பம் ஏற்படும். இது பரவ வாய்ப்பில்லை என்றாலும் சில முன் எச்சரிக்கைகளை செய்வது நல்லது.
உதாரணமாக நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு செல்வதை தவிர்க்கலாம். இந்நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து திரும்புபவர்கள் தங்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நோய் பாதிப்பு உள்ளவர்கள் என்றால் அவர்களுடன் நேரடியான தொடுதலை தவிர்த்து, விலகியிருப்பது நல்லது. பாதிக்கப்பட்டவர் அருகில் இருக்க நேர்ந்தால் வாய், மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். கை, கால்களை நன்றாக சோப் போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்கவும். பன்றிகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடமாடாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதனால் பன்றிகளை வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆங்கில மருந்துகள்:
"டாமிஃபுளூ" 75 மில்லி கிராம், மாத்திரை அல்லது கேப்சூல் வடிவில் இரண்டு வேளை சாப்பிடும்படி ஒரு வாரத்துக்கு கொடுப்பார்கள். நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப வேறு சில மருந்துகளையும் கொடுக்கலாம். தடுப்பூசியோ, நோயின் வீரியத்தை உடனே குறைக்கும் மருந்துகளோ இல்லை. ஆனால் ரத்தப் பரிசோதனை, உமிழ்நீர், சிறுநீர் போன்றவற்றை பரிசோதனை செய்து பன்றிக் காய்ச்சல்தானா என்பதனை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். பிறகுதான் சிகிச்சை தொடங்க வேண்டும்.
ஹோமியோ மருந்துகள்:
ஹோமியோபதி மருத்துவத்தில் "ஆன்ட்டி வைரஸ்" மருந்துகள் நிறைய உள்ளன. மெர்க்கால், சல்பர், ஆர்ணிகா, ரஸ்டாக்ஸ், பிலிம்பம் மெட் போன்ற மருந்துகள் பன்றிக் காய்ச்சல் நோயை வரும் முன்னர் காக்கவும், வந்த பின்னர் குணப்படுத்தவும் மிகவும் உகந்த மருந்துகளாகும். ஆனால் இதை பயன்படுத்த ஒரு சிறந்த ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
சத்தான உணவுகள்:
உடற்பயிற்சியுடன் சத்தான உணவுகளை சாப்பிட பழகி விட்டால், அப்புறம் ப்ளூவாவது, வைரசாவது... எதுவும் எட்டிப்பார்க்க கூட பயப்படும். இதற்கு உடற்பயிற்சியுடன் தேவை, சிறந்த உணவு முறை.
* தயிர்: சிலர் தயிர் மோர் சாப்பிடவே மாட்டார்கள். சாப்பாட்டில் சாம்பார், ரசம் வரை வந்ததும் எழுந்து விடுவர். தயிரில் பல சத்துக்கள் உள்ளன. உடலில் நல்ல பாக்டீரியாவை தக்க வைத்தக் கொள்ள இது உதவும். ஒரு நாளைக்கு ஒரு கப் குடித்தால் போதும்.
* இறைச்சி: "சிங்க்" எனப்படும் துத்தநாக கனிம சத்து, நம் உடலுக்கு மிக முக்கியம். உடலில் புகும் பாக்டீரியா, வைரசை விரட்டி விடும். சிக்கன் மூன்று நாள், மட்டன் இரண்டு நாள் என்று ஆரோக்கியமானவர்கள் சாப்பிடலாம். சைவப்பிரியர்களுக்கு பச்சைக் காய்கறிகள், கீரைகளில் இந்த சத்து உள்ளது. இந்த இரும்பு சத்துள்ள உணவுகளை சாப்பிடலாம். பால், தயிர் போன்ற பால் பொருட்களிலும் கனிம சத்துக்கள் உள்ளன.
* வைட்டமின் ஏ, சி: சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிற பழங்களை சாப்பிட்டாலே போதும். வைட்டமின் "ஏ" கிடைக்கும். அது இல்லாமல் தான் சுவாசக்குழாய், ஜீரணப்பை, சிறுநீரகம் போன்றவற்றில் பாதிப்பு வருகிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க "சி" வைட்டமின் முக்கியம். எலுமிச்சை, பப்பாளி, ஆரஞ்சு ஆகியவற்றில் இந்த சத்து உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு பிரஷ் "லைம் ஜூஸ்" சாப்பிட்டாலே போதும்.
* மீன்: மீன், ஷெல் பிஷ் வகை உணவு சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களுக்கு உடலில் முழு எதிர்ப்பு சக்தி இருக்கும். சைவப்பிரியர்கள், மீன் எண்ணெய், ஒமேகா பேட்ஸ் பேன்றவற்றை பயன்படுத்தலாம். வேண்டாத கொழுப்புகளை உடலில் இருந்து நீக்கி விடும்.
* பூண்டு: அல்லிசின், அஜியோன், தியோசல்பினேட்ஸ் ஆகிய தொற்றுக்கிருமிகளை எதிர்க்கும் சத்துக்கள் உள்ளன. இதில் உணவில், ரசத்தில் தினமும் பூண்டு சேர்த்தால் மிக நல்லது. இந்த இரண்டு முறையையும் கடைபிடித்து பாருங்க; கண்டிப்பாக வைரஸ் ஓட்டம் பிடிக்கும்.
அதனால் பன்றிக் காய்ச்சல் பற்றி இனி யாரும் பயப்படத் தேவையில்லை.

No comments:

Post a Comment